வங்கி கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்டவற்றிற்கு ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்ததனை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட 31 மனுக்கள் மீதான விசாரணை முடிந்து அதற்கான தீர்ப்புகள் வெளியானது. எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள முக்கிய அம்சங்களை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.
வங்கி கணக்கு
வங்கி கணக்குகளில் ஆதார் எண் இணைப்புக் கட்டாயம் என்பதை உச்ச நீதிமன்றம் நீக்கியுள்ளது.
மொபைல் எண்
மொபைல் சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற டெலிகாம் துறையின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
பள்ளிகள்
பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கட்டாயம் இல்லை என்றும், நீட், சிபிஎஸ்ஈ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் அதார் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆதார் செல்லும்
ஆரசியல் சாசன விதிகளின் படி ஆதார் செல்லும். ஆனால் தனிநபர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
பான் கார்டு
வருமான வரித் துறை கீழ் வழங்கப்படும் பான் கார்டு இணைப்பிற்கு ஆதார் எண் கட்டாயம் ஆகும். எனவே ஆதார் எண் இல்லாமல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்க முடியாது.