மத்திய அரசு மக்கள் நல திட்டங்கள், நிதி சார்ந்த திட்டங்கள், வங்கி, பான் கார்டு மற்றும் மொபைல் எண் போன்றவறில் ஆதார் எண் இணைப்பைக் கட்டாயம் என அறிவித்தது. இந்த வழக்கினை நீண்ட காலமாக விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது.
மத்திய அரசு ஆதார் இணைப்பு கட்டாணம் என்று கூறியதை எதிரித்து ஆதார் எண் இணைப்பினால் தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் 31 மனுக்கள் ஏற்கப்பட்டு அதற்கான விசாரணையும் நடைபெற்று வந்தது.
அதனால் மக்கள் நல திட்டங்கள், நிதி சார்ந்த திட்டங்கள், வங்கி, பான் கார்டு மற்றும் மொபைல் எண் போன்றவையில் ஆதார் எண் இணைப்பைச் செய்ய விதிக்கப்பட்டு இருந்த காலக்கெடு வரம்பின்றி நீட்டிக்கப்பட்டு இருந்தது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் அந்த வழக்கு குறித்து முக்கியத் தீர்ப்பினை சிஜிஐ தீபக் மிஷ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் குழு வழங்கினர். அதில் வங்கி கணக்கு மற்றும் மொபைல் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு அவசியம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளனர்.