என்ன காரியம்ன்னு படிக்கிறதுக்கு முன்னாடி , இன்னக்கி என்ன ஸ்பெஷல்ன்னு தெரியுமா...? உலக இதய தினம் (World heart day). நமக்கு தெரிய வாய்ப்பே இல்ல. ஏன்னா இன்னக்கி லீவு விடல. சரி மேட்டருக்கு வருவோம்.
உலக இதய தினம்
World heart foundation என்கிற அமைப்பு கடந்த 1997-ம் ஆண்டில் இருந்து செப்டம்பர் 29-ம் தேதியை உலக இதய தினமாகக் கொண்டாடி வருகிறது. இந்த தினத்தில் நமக்காக 24 மணிநேரமும் உழைக்கும் இதயத்துக்கு தேவையானவைகளை கவனிக்க, இதயத்தை ஆரோக்கியமாக இயங்க வைக்க என்ன எல்லாம் செய்ய வேண்டும், எதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என்று புல்லட் பாயிண்டில் 100 நாடுகளுக்கு மேல் சொல்லி வருகிறது.
இந்தியாவில்
அது ஒரு பக்கம் இருக்கட்டும், நம் இந்தியாவில் இந்த உலக இதய தினத்தை முன்னிட்டு ஒரு விஷயம் நடந்தது. அது என்ன என்று தெரியுமா. அதுவும் மம்தா பேனர்ஜியின் மேற்கு வங்க மாநிலத்தில்
இருதய ஆறுவை சிகிச்சை
"சிசூ சதி" என்கிற திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தைகளுக்கு இலவசமாக அரசு மருத்துவமனைகளில்,மேல் நாட்டு தரத்தில் இருதய அறுவை சிகிச்சைகள் செய்கிறார்கள். இந்த திட்டம் கடந்த 2013-ம் ஆண்டிலேயே கொண்டு வரப்பட்டு வெற்றி நடைபோட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த திட்டம் சிறப்பாக செயல்பட்டு பல குழந்தைகளை இன்று வாழ வைத்து வருகிறது.
ஏழை பணக்காரன்
இந்த திட்டத்தின் கீழ் எந்த ஒரு குழந்தையும் அவர்களின் பொருளாதார பின் புலம் வித்தியாசம் இல்லாமல் சிகிச்சைப் பெறலாம். "பலமான இதயம், வருங்கால வங்காளிகளுக்கு முக்கியம்" என்று மம்தா மேடம் புன்னகைக்கிறார். ச்ச்சே. இந்த செய்தியைப் படித்த உடன் நமக்கே மேற்கு வங்கத்தில் பிறந்திருக்கலாம் என்று தானே தோன்றுகிறது.