ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான சந்தா கோச்சர் முன்கூட்டியே அவரது பதவியில் இருந்து விலக இன்று அனுமதி அளிப்பதாகப் போர்டு தெரிவித்துள்ளது.
இன்று பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் சந்தா கோச்சரின் ராஜிநாமா கடிதத்தினை உடனே ஏற்பதாகவும் ஐசிஐசிஐ வங்கி குறிப்பிட்டுள்ளது.
மோசடி குறித்த விசாரணையில் பாதிப்பில்லை
சந்தா கோச்சர் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகுவதால் தற்போது நடைபெற்றுள்ள மோசடி குறித்த விசாரணைக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும், இது ஒரு வகையில் நன்மையே என்றும் தெரிவித்துள்ளனர்.
அடுத்தத் தலைவர் யார்?
சந்தா கோச்சர் ஐசிஐசிஐ வங்கி தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலகியுள்ளதால் தற்போது வங்கியின் நிர்வாக இயக்குனர் & தலைமை செயல் அதிகாரியாக உள்ள சந்தீப் பாக்ஷி தலைமை நிர்வாகப் பெருப்பினை ஏற்க உள்ளார்.
பதவிக் காலம்
இதனை அடுத்து சந்தீப் பாக்ஷி ஐசிஐசிஐ வங்கியின் தலைவராக 2023 அக்டோபர் 3-ம் தேதி வரை இருப்பார் என்றும் இதற்கு ஆர்பிஐ மற்றும் பிற அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
பிற விதிமுறைகள்
பணி நியமனம், ஊதியம் போன்ற பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் பங்கு சந்தைக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.