கோதுமை மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையினை 6% உயர்த்தி மத்திய அரசு அதிரடி!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2018-2019 நிதி ஆண்டுக்கான கோதுமை மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு 6 சதவீதம் உயர்த்தி 105 ரூபாயாக நிர்னைத்துள்ளதாகப் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு வரை 100 கிலோ கோதுமைக்கு ஆண்டுக்கு 1,735 ரூபாய் அளித்த வந்த குறைந்தபட்ச ஆதரவு விலையானது 1,840 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் கூறினார்.

அரிசி மற்றும் கோதுமை

அரிசி மற்றும் கோதுமை

சர்வதேச அளவில் இரண்டாம் மிகப் பெரிய அளவில் அரிசி, கோதுமை உற்பத்தி நாடு என்ற பெயரினை இந்தியா பெற்றுள்ளது. விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் இந்தக் கோதுமைகளை மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களுக்குப் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

முன்பு ரியூட்டர்ஸ் கோதுமை மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையினை மத்திய அரசு 6 சதவீதம் வரை உயர்த்தும் என்று கூறியிருந்தது. அதனை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு இந்த விலை உயர்வினை அறிவித்துள்ளது.

 

பட்டாணி

பட்டாணி

கோதுமை மட்டும் இல்லாமல் பட்டாணி மீதான குறைந்தபட்ச ஆதரவு விலையினையும் மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. முன்பு 100 கிலோ பட்டாணிக்கு 4,200 ரூபாய் அளிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை 4,620 ரூபாயாக உயர்த்தியுள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்தக் குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. அதே நேரம் சாமானிய மக்களுக்குக் சில்லறை வணிகங்களில் கோதுமை மற்றும் பட்டாணி மீதான விலை உயர்ந்து பட்ஜெட் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Government Raises Wheat Minimum Support Price By 6% For 2018-19

Government Raises Wheat Minimum Support Price By 6% For 2018-19
Story first published: Thursday, October 4, 2018, 8:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X