உலகின் மிகப் பெரிய குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ இந்தியாவில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.
பெப்ஸிகோ நிறுவனம் இந்தியாவில் 10 வருடங்களுக்கும் மேலாக வர்த்தகம் செய்து வரும் நிலையில் குளிர்பானங்கள் மற்றும் லேஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனிகளையும் விற்று வருகிறது. மேலும் அன்மையில் நிறுவனங்களின் பதிவாளருக்குத் தாக்கல் செய்த அறிக்கையில் 2017-2018 நிதி ஆண்டில் 190 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இது குறித்து முழுமையான விவரங்களை இங்குப் பார்ப்போம்.
லாபம்
2017-2018 நிதி ஆண்டில் பெப்ஸிகோவின் விற்றுமுதல் 7 சதவீதம் சரிந்து இருந்தாஉம் லாபம் இரட்டிப்பாகியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
சென்ற ஆண்டு இதுவே 148 கோடி ரூபாய் நட்டம் அடைந்துள்ளதாகப் பெப்ஸி தெரிவித்து இருந்தது. கடைசியாகப் பெப்ஸிகோ 2010-2011 நிதி ஆண்டில் தான் லாபத்தினைப் பதிவு செய்து இருந்தது.
எப்படி இந்த மாற்றம்?
லாபம் அளிக்கும் தயாரிப்புகளில் கவனம் செலுத்தியது, பேக்கேஜில் மாற்றம், புதுமையைப் புகுத்த, செலவைக் குறைத்தல் போன்ற காரணங்களா இந்த வளர்சியை எட்டியுள்ளதாகப் பெப்ஸிகோ இந்தியாவின் தலைமை நிதி அதிகாரி ராஜ்தீப் தத்தா கூறியுள்ளார்.
பணவீக்கம்
இந்தியாவில் ஏற்பட்ட பணவீக்கம் போன்ற பல்வேறு காரணங்களால் பெப்ஸிகோவின் லாபம் சரிந்ததற்கான முக்கியக் காரணங்கள் ஆகும். இதனைச் சரி செய்யப் பெப்ஸிகோ செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட அதே நேரம் 2015-2018 இடைப்பட்ட காலத்தில் 80 புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ளது.
வதந்திகள்
லேஸ், குர்குகே, குவேக்ஸ், டோரிடோஸ் போன்றவை பெப்ஸிகோவின் வளர்ச்சிக்கு உதவியுள்ளன. அது மட்டும் இல்லாமல் குர்குரேவில் பிளாஸ்டிக் கலந்து இருப்பதாகச் சமுக வலைத்தளங்களில் பரவி இவரும் வதந்திகளைத் தடுக்கும் நடவடிக்கைய்களையும் பெப்ஸிகோ எடுத்து அதில் வெற்றியும் கண்டது.
முதன்மை வணிகம்
பெப்ஸிகோ மற்றும் அதன் போட்டி நிறுவனமான கோகோ கோலா நிறுவனங்களின் முதன்மை தயாரிப்பான குளிர்பானங்களில் மிகப் பெரிய சந்தையை இழந்துள்ளன. மறுபக்கம் மக்கள் சத்தான உணவுகளை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த துவங்கினர்.
பயன்படுத்திக்கொண்ட பெப்ஸி
இதனைச் சரியாகப் பயன்படுத்திய பெப்ஸி டிராப்பிக்கான உள்ளிட்ட பழரச குளிர்பானங்களையும் அறிமுகம் செய்தது. அது மட்டும் இல்லாமல் இந்தியர்கள் அதிகம் விரும்பிச் சாப்பிடும் நொறுக்கு தீனி சந்தையிலும் மிகப் பெரிய வளர்ச்சியைப் பெற்று 7 வருடங்களுக்குப் பிறகு லாபத்தினைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?



Click it and Unblock the Notifications