பெட்ரோல், டீசல் மீதான விலை வரலாறு காணாத விதாமாக தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அதனை குறைக்கும் வகையில் மத்திய அரசு கலால் வரியினை குறைத்துள்ளது. இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை லிட்டர் ஒன்றுக்கு 1.5 ரூபாய் குறையும் என்றும் அருண் ஜேட்லி அறிவித்துள்ளார். இந்த வரி குறைப்பு உடனடனடியாக அமலுக்கு வருவாதாவும் கூறினார்.
எண்ணெய் நிறுவனங்கள்
கலால் வரி குறைப்பு மட்டும் இல்லாமல் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலையினை 1 ரூபாய் வரை குறைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் மொத்த விலை குறைப்பு
காலால் வரி குறைப்பு 1.5 ரூபாய் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் பங்கு 1 ரூபாய் என நாளை முதல் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான விலை 2.50 ரூபாய் வரை குறைய உள்ளது.
மாநில அரசுகளுக்கு கோரிக்கை
இவை மட்டும் இல்லாமல் மாநில அரசுகளை 2.5 ரூபாய் வரை பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் என்றும் மத்திய அரசு கோரிக்கை வைப்பதாகவும் அதற்கான கடிதம் அனுப்பப்படும் என்று அருண் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
வருவாய் இழப்பு
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி குறைப்பினால் மத்திய அரசுக்கு 10,500 கோடி ரூபாய் வரை இந்த ஆண்டில் வருவாய் இழப்பு ஏற்படும்.
சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரொல் 87.33 ரூபாய் என்றும், டீசல் 797.89 ரூபாய் லிட்டர் எனவும் விற்பானை செய்யப்பட்டு வருகிறது. இதே விலையில் நாளை 2.5 ரூபாய் குறையும்.
மத்திய அரசு
பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்றும் நீண்ட காலமாக கோரிக்கை வைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த விலை குறைப்புடன் மத்திய அரசு அவற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.