எப்எம்சிஜி துறையில் மிகப் பெரிய வெற்றியைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ள நிலையில் சமுகச் சேவைக்காக 1 லட்சம் கோடி ரூபாயினைச் செலவு செய்ய இருப்பதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பெண்கள் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தங்களது சமுகச் சேவை திட்டங்களில் மருத்துவம், ஆய்வு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாயினைச் செலவு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவன
பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தற்போது விவசாயம் மற்றும் பதப்படுத்திய உணவு விற்பனை உள்ளிட்ட துறையில் கவனம் செலுத்தி வருகின்றது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.
பதஞ்சலி எப்எம்சிஜி பிரிவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. மறு பக்கம் சூரிய மின்சாரம் உற்பத்தித் துறையிலும் பதஞ்சலி கவனம் செலுத்தி வருகிறது.
இயற்கை விவசாயம் மற்றும் பால்
இயற்கை விவசாயத்தினைப் பதஞ்சலி ஊக்குவிக்கும். சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், பிற போட்டியாளர்களை விடக் குறைவான விலைக்குப் பால விற்கப்படும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.
பதஞ்சலியின் வருங்காலத் திட்டங்கள்
2019 மார்ச் மாதத்திற்குள் பதஞ்சலி நிறுவனம் 100 புதிய கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்த பதஞ்சலி நிறுவனம் அதனை 30,000 கோடி ரூபாயாக அதிகரிப்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறது. மேலும் உலகின் நம்பர் 1 எப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சலியை உயர்த்துவதே தனது நோக்கம் என்றும் பாபா ராம்தேவ் கூறி வருகிறார்.
பங்கு சந்தை
பதஞ்சலி நிறுவனம் ஒரு சேவை நிறுவனம் என்றும் அதனால் பங்கு சந்தையில் வெளியிடும் எண்ணம் ஏதுமில்லை என்றும் வெளிநாட்டு முதலீடுகளையும் பெற மாட்டோம் என்று பாபா ராம்தேவ் பல முறை தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications