சில்லறை பணவீக்க குறியீடு வெள்ளிக்கிழமை மாலை வெளியானது. ஆகஸ்ட் மாதம் சில்லறை பணவீக்கம் 3.69 சதவீதமாக இருந்த நிலையில் செப்டம்பர் மாதம் சிறிய அளவில் உயர்ந்து 3.77 சதவீதமாக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் மாதம் சில்லறை பணவீக்க இலக்கினை 4 சதவீதமாக வைத்து இருந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினால் பணவீக்கம் 4 சதவீதத்தினை விடக் கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3.77 சதவீதமாக உள்ளது என மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மீதான பணவீக்கம் ஆகஸ்ட் மாதம் 0.29 சதவீதமாக இருந்து. இதுவே செப்டம்பர் மாதம் 0.51 சதவீதமாக அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்புச் சரிவு, விவசாயப் பொருட்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை உணவுப் பொருட்கள் விலை உயர்வுக்குக் காரணம் ஆகும். அதே நேரம் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி ஆகஸ்ட் மாதம் 4.3 சதவீதமாகச் சரிந்துள்ளது..
மத்திய வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தின் அறிவிப்பு டிசம்பர் மாதம் 5-ம் தேதி வெளியாகும்.