மொபைல் வாலெட்களுக்கு இடையில் யூபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்யக்கூடிய முறையினை அறிமுகம் செய்வதற்கான விதிகளை ஆர்பிஐ வகுத்துள்ளது.
இந்த முறை நடைமுறைக்கு அமலுக்கு வந்த பிறகு ஒரு வாலெட் நிறுவனம் பிற வாலெட் பயனர்களைத் தங்களது சேவைக்கு மாறுமாறு கோரிக்கை வைக்கக் கூடாது என்பது முக்கிய விதியாக உள்ளது.
அமைப்புகள்
இரண்டு வாலெட் நிறுவனங்களுக்கு இடையில் பணப் பரிமாற்றம் செய்வதற்கான அமைப்புகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அது தயார் ஆன உடன் இந்தச் சேவை அமலுக்கு வரும். இதனால் வாலெட்டில் இருந்து வங்கி கணக்குகளுக்கு மட்டும் தான் பணப் பரிமாற்றம் செய்ய முடியும் என்ற நிலை மாறும். வங்கி கணக்குகள் போன்று இரண்டு வாலெட் கணக்குகள் இடையில் பணத்தினைப் பரிமாற்றம் செய்யலாம்.
யூபிஐ
வாலெட்டில் இருந்து வங்கி கணக்கிற்கு ஐஎம்பிஎஸ் முறையில் பணப் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இரண்டு வாலெட்கள் இடையில் யூபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிகள் வழங்க இருப்பதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
ஆர்பிஐ
2016-ம் ஆண்டு முத யூபிஐ பணப் பரிவர்த்தனை சேவை பயன்பாட்டில் உள்ள நிலையில் வாலெட் நிறுவனங்கள் இடையில் பணப் பரிமாற்றம் செய்வது குறித்த விதிகளை ஆர்பிஐ கடந்த அக்டோபர் மாதம் முதல் வகுத்து வந்தது.
ரகுராம் ராஜன்
யூபிஐ பணப் பரிமாற்ற சேவை முன்னாள் ஆர்பிஐ கவர்னர் ரகுராம் ராஜன் பதவிக்காலம் முடியும் முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தச் சேவை மூலம் ஏடிஎம், இணையதள வங்கி சேவை போன்றவை ஏதும் இல்லாமல் இரண்டு வங்கி கணக்குகளுக்கு இடையில் பணப் பரிமாற்றம் செய்ய முடியும்.