மத்திய நேரடி வரி வாரியம் திங்கட்கிழமை நேரடி வரி ஜிடிபி விகிதம் கடந்த மூன்று வருடங்களாகத் தொடர்ந்து உயர்ந்து 2017-2018 நிதி ஆண்டில் 5.98 சதவீதமாக உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பிற விவரங்களை இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.
வருமான வரி தாக்கல்
கடந்த 4 நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை 80 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2013-2014 நிதி ஆண்டில் 3.79 கோடி நபர்கள் வருமான வரி தாக்கல் செய்திருந்த நிலையில் 2017-2018 நிதி ஆண்டில் 6.85 கோடி நபர்களாக அதிகரித்துள்ளனர்.
வரி செலுத்துபவர்கள்
வரி தாக்கல் செய்பவர்களில் வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 85 சதவீதம் உயர்ந்துள்ளது. 2013-2014 மதிப்பீட்டு ஆண்டில் 3.31 கோடி நபர்கள் வரி செலுத்திய நிலையில் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 5.44 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வரி செலுத்துபவர்களின் வருவாய்
வருமான வரி தாக்கல் செய்பவர்களுள் 67 சதவீதத்தினரின் வருவாய் அதிகரித்து 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 44.88 லட்சம் கோடி ரூபாயாகவும், 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 26.92 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது.
நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட நேரடி வரி வருவாய்
நிறுவனங்கள் செலுத்தும் நேரடி வரி வருவாயும் 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 49.95 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவே 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 32.28 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
தனிநபரிடமிருந்து வசூல் செய்யப்பட்ட நேரடி வரி வருவாய்
தனிநபர்கள் செலுத்தும் நேரடி வரி 26 சதவீதம் அதிகரித்து 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 58,576 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 46,377 கோடி ரூபாயாக இருந்தது.
மாத சம்பளம்
மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மாத சம்பளம் வாங்கி வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்து 2017-2018 மதிப்பீட்டு ஆண்டில் 2.33 கோடி ரூபாயாக உள்ளது. இதுவே 2014-2015 மதிப்பீட்டு ஆண்டில் 1.70 கோடியாகும்.
தனிநபர் சராசரி சம்பளம்
தனிநபர்களின் சராசரி சம்பளம் 19 சதவீதம் உயர்வு என 5.76 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 6.84 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.