மார்ச் 2019 வரை இந்திய ஐடி துறை நல்ல காலம்..!

அமெரிக்க டிரம்ப் முதல் புதிய தொழில்நுட்பம் வரையில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் இந்திய ஐடி துறையில் கடந்த சில மாதங்களாகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை, புதிய ஊழியர்களை அதிகளவில் பணியில் அமர்த்தவும் இல்லை.

இந்நிலையில் இந்த நிலைய தற்போது முழுமையாக மாறியுள்ளது.

ஐடி ஊழியர்கள் மத்தியில் ஆய்வு

ஐடி ஊழியர்கள் மத்தியில் ஆய்வு

நவம்பர் மாதம் முதல் மார்ச் 2019 வரையில் இந்திய ஐடி துறையில் இருக்கும் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தத் திட்டமிட்டுள்ளது என எக்ஸ்பீரிஸ் ஐடி எம்பிளாய்மென்ட் அவுட்லுக் ஆய்வு கூறுகிறது. இந்த ஆய்வில் சுமார் 550 ஐடி ஊழியர்கள் மத்தியில் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வின் முடிவில் அடுத்த இரு காலாண்டுகளுக்கு இந்தியாவில் இருக்கும் ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான பணிகளை உருவாக்க உள்ளதாகத் தெரிகிறது.

 

காக்னிசென்ட்

காக்னிசென்ட்

காக்னிசென்ட் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஊழியர்கள் பணிநீக்க செய்தி ஐடி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியுடன் சோகத்தையும் அளித்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள ஆய்வின் முடிவுகள் ஐடி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் எனத் தெரிகிறது.

எந்த துறையில் அதிகளவிலான பணிகள்?

எந்த துறையில் அதிகளவிலான பணிகள்?

இந்த இரு காலாண்டில் டிஜிட்டல் பரிமாற்ற துறையில் தான் அதிகளவிலான பணிகள் உருவாகும் எனவும் இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் வேலைவாய்ப்புகள்

கூடுதல் வேலைவாய்ப்புகள்

டிஜிட்டல் துறையைத் தாண்டி செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் மற்றும் சைபர் செக்யூரிட்டி ஆகிய துறையிலும் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+