இந்தியாவின் முதல் கிரிப்டோகரன்ன்ஸி ஏடிஎம் சேவை திங்கட்கிழமை முதல் பெங்களுரிவில் தொடங்கப்பட்ட நிலையில் மத்திய குற்றப் பிரிவு அதனைப் பரிமுதல் செய்தது மட்டும் இல்லாமல் அதன் இணை நிறுவனரையும் கைது செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பிட்காயின் முதலீடு செய்யத் தடை இல்லை என்றாலும் அது இந்திய சட்டங்களுக்கு உட்பட்டதல்ல என்றும் பணத்தினை இழந்தார் அரசும், ரிசர்வ் வங்கியின் பொறுப்பேற்காது என்று கூறப்பட்டு வரும் நிலையில் யூனோகாயின் நிறுவனம் இந்த ஏடிஎம் மையத்தினைத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.
கிரிப்டோகரன்ஸி ஏடிஎம்
பெங்களூரு எச்ஏஎல் பகுதியில் உள்ள கெம்ப் ஃபோர்ட் மாலில் சென்ற வாரம் சோதனை முயற்சியாக இந்தக் கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் இயந்திரத்தினை அமைத்த யூனோ காயின் நிறுவனம் குறைந்தது 1000 ரூபாய் வரை ரொக்க பணத்தினை டெபாசிட் செய்து பிட்காயின் போன்றவற்றை வாங்கலாம் என்று தங்களது சமுக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தது.
வைரல்
கிரிப்டோகரன்ஸி ஏடிஎம் குறித்த செய்திகள் மற்றும் சமுக வலைத்தளங்களில் வைராலன நிலையில் மத்திய குற்ற பிரிவு ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து இந்தக் கைது நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளது.
கைது
மேலும் கைது செய்யப்பட்ட யூனோகாயின் இணை நிறுவனரான விஜய் குமாரை விசார்த்த போது இந்த ஏடிஎம் சேவைக்காக இவர் ஆர்பிஐ மற்றும் உள்ளூர் நிறுவன சட்டங்கள் படி பதிவு செய்து யாரிடமும் அனுமதியினையும் பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
பரிவர்த்தனைகள்
இந்தப் பரிவர்த்தனை வெளிப்படையாக இருக்காது என்றும், முதலீட்டாளர்கள் ஏமாற நேரிடும் என்றும் ஏடிஎம் இயந்திரம் பிட்காயினின் நடப்பு மதிப்புகளைக் காண்பிக்காது என்றும் விஜய் குமார் தெரிவித்துள்ளார்.
பரிமுதல்
விஜய் குமாரை கைது செய்த போது அவரிடம் இருந்து 2 லேப்டாப்புகள், ஒரு மொபைல் போன், 5 டெபிட் கார்டு, ஒரு பாஸ்போர்ட், ஒரு கிரிப்டோகரன்ஸி சாதனம் மற்றும் ரொக்க பணம் 1.79 லட்சம் ரூபாயினைப் பரிமுதல் செய்துள்ளனர். மேலும் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திச் சிறையில் அடைத்துள்ளனர்.
More From GoodReturns

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

ஏடிஎம் கார்டுக்கு வீட்டிலிருந்தே விண்ணப்பிப்பது எப்படி?ஆன்லைன் முதல் ஆஃப்லைன் வரை முழு கைடு இதோ!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications