இந்தியாவின் 4வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான ஹெச்சிஎல் சந்தையில் இருக்கும் பிற முன்னணி நிறுவனங்களைப் போலவே பல்வேறு விதமான வர்த்தகப் பிரச்சனைகளைச் சந்தித்து வந்த நிலையில் தற்போது இதில் இருந்த முழுமையாக மீண்டு வரவில்லையென்றாலும் கணிசமான பிரச்சனைகள் அனைத்து நிறுவனங்களிலும் தீர்க்கப்பட்டுள்ளது.
30,000 வேலை வாய்ப்பு
இந்நிலையில் ஹெச்சிஎல் நிறுவனம் இந்த வருடத்தில் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புதிய திட்டங்களைப் பெற திட்டமிட்டுள்ளதால் ஹெச்சிஎல் இந்த முடிவை எடுத்துள்ளது.
ஸ்டாக் இன்ஜினியர்கள்
மேலும் இந்த நிதியாண்டில் ஸ்டாக் இன்ஜினியர்களை அதிகளவில் பணியில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. இந்தகவல் அனைத்தும் ஹெச்சிஎல் நிறுவனத்தின் மனிதவள பிரிவின் தலைவர் அப்பாராவ் தெரிவித்துள்ளார்.
ஊழியர்கள் எண்ணிக்கை
தற்போதைய நிலையில் இந்நிறுவனத்தில் சுமார் 1,27,875 பேர் பணியாற்றி வரும் நிலையில், நடப்பு நிதியாண்டின் செப்டம்பர் காலாண்டில் 3,754 பேரை நிறுவன பணியில் புதிதாக அமர்த்தியுள்ளது.
புதிய ஒப்பந்தங்கள்
ஹெச்சிஎல் இக்காலாண்டில் டிஜிட்டல் மற்றும் அனலிடிக்ஸ், கிளவுட், IoT, சைபர் செக்யூரிட்டி, மற்றும் பிற பிரிவில் சுமார் 17 வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
ஹெச்1பி விசா
அனைத்தையும் தாண்டி ஹெச்சிஎல் நிறுவனம் தனது அமெரிக்க வர்த்தகத்தைக் காப்பாற்றும் வகையில் ஹெச்1பி விசாவை நம்பியிருக்கும் நிலையை அதிகளவில் குறைத்துள்ளது என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.