உச்ச நீதிமன்றம் தனியார் நிறுவனங்கள் அதார் சரிபார்ப்பு முறை மூலம் சிம் கார்டு விற்பனை செய்ய் தடை வித்துள்ள நிலையில் அதனை வெள்ளிக்கிழமை உறுதி செய்த மத்திய அரசு இனி டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் மின்னணு சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்தக் கூடாது என்றும் ஆர்டர் போட்டுள்ளது.
உச்ச நீதி மன்றம் செப்டம்பர் மாதம் ஆதார் குறித்த தீர்ப்பில் தனியார் நிறுவனங்கள் ஆதார் தரவினை பயன்படுத்த தட்டை விதித்தது.
எப்போது முதல் ஆதார் தேவையில்லை?
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை உறுதி செய்ய முடிவு செய்துள்ள டெலிகாம் துறையும், மத்திய அரசு நவம்பர் 5-ம் தேதிக்குப் பிறகு டெலிகாம் நிறுவனங்கள் ஆதார் சரிபார்ப்பு முறையினைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது.
ஆதார் நகல் மூலம் சிம் கார்டு வாங்க முடியுமா?
அதன் படி டெலிகாம் நிறுவனங்கள் இனி புதிய சிம் கார்டுகளை விற்கும் போது வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைக் கட்டாயமாகக் கேட்கக் கூடாது. ஆனால் ஆதார் கார்டு நகலினை சமர்ப்பித்துச் சிம் கார்டு வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் பழைய முறை
அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் 2018 நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஆதார் எண் சரிபார்ப்பு முறையினைச் செய்ய முடியாது என்பதால் பழைய முறைப் படி தான் சிம் கார்டுகள் விற்க முடியும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
புழம்பும் டெலிகாம் நிறுவனங்கள்
அதார் சரிபார்ப்பு முறையினைத் தங்களது சிம் கார்டு விற்பனை சேவைக்காக அமல்படுத்த கோடி கணக்கில் செலவு செய்த டெலிகாம் நிறுவனங்களுக்கு இது ஒரு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மீண்டும் பழைய முறையில் சிம் கார்டு விற்க வேண்டும் என்றால் அதற்கு ஏற்றவாறு தங்களது அமைப்புகளை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
டெலிகாம் துறை
மேலும் ஆதார் இணையதளத்தில் இருந்த மொபைல் எண், ஆதார் எண் இணைப்புச் சரிபார்ப்பு முறையினையும் திரும்பப் பெறுவதாக டெலிகாம் துறை தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

ஹார்முஸ் ஜலசந்தியில் சிக்கி இருக்கும் 700 எண்ணெய் கப்பல்கள்:ஒரு இன்ச் நகர்ந்தா கூட சோலி முடிஞ்சிடும்

சவுதி அரேபியாவில் இருக்கும் இந்தியர்களே உஷார்.. இந்திய தூதரகத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது..! #NRI



Click it and Unblock the Notifications