இன்று முதல் எஸ்பிஐ வங்கி ஏடிஎம் விதிமுறைகளில் மாற்றம்..உஷார்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் வர இருக்கும் அக்டோபர் 31-ம் தேதி முதல் தினம் 20,000 ரூபாய் வரையில் மட்டுமே ரொக்கப் பணம் பரிமாற்றம் செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளது. இதுவே அக்டோபர் 30-ம் தேதி அரை 40,000 ரூபாய் வரை எஸ்பிஐ ஏடிஎம் மையங்கள் அனுமதி அளிக்கும். அது மட்டும் இல்லாமல் டிடிஎஸ் பிடித்தத்தினைத் தவிர்க கூடிய படிவம் 15G/H சமர்ப்பிக்கும் விதிகளிலும் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளனர்.

இதுவே அதிகப்படியான தொகையினை எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க வேண்டும் என்றா அதற்கு ஏற்றப் பிற கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற வேண்டும்.

கூடுதல் கட்டணம்

கூடுதல் கட்டணம்

எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் இருந்து அதிகத் தொகை எடுக்கக் கூடிய ஏடிஎம் கார்டுகளைப் பெற்றால் அதற்குக் கூடுதலான ஆண்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

எஸ்பிஐ டெபிட் கார்டு பயனர்கள்

எஸ்பிஐ டெபிட் கார்டு பயனர்கள்

2018 மார்ச் 31-ம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் 39.50 கோடி டெபிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளது. அதில் 26 கோடி டெபிட் கார்டுகள் தொடர்ந்து பரிவர்த்தனை செய்யக் கூடியவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள்

கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள்

எஸ்பிஐ வங்கியின் கிளாசிக் மற்றும் மேஸ்ட்ரோ டெபிட் கார்டுகள் மூலம் ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்கும் வரம்பு மட்டுமே 40,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாகக் குறைக்கப்படுகிறது.

பிற கார்டுகள்

பிற கார்டுகள்

இதுவே எஸ்பிஐ கோல்டு மற்றும் பிளாட்டினம் டெபிட் கார்டுகள் பயன்படுத்துபவர்கள் முறையே தினமும் 50,000 ரூபாய் மற்றும் 1 லட்சம் ரூபாயினை ரொக்க பணமாக ஏடிஎம் மையங்களில் இருந்து எடுக்க அனுமதிக்கப்படுவார்கள்.

ஏன் இந்த அதிரடி முடிவு?

ஏன் இந்த அதிரடி முடிவு?

எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் மோசடிகள் நடைபெறுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் இழப்பினை குறைக்கவே எஸ்பிஐ வங்கி இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

படிவம் 15G/H

பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்யும் போது வரும் வட்டி பணத்திற்குப் பிடித்தம் செய்வது வழக்கம். வருமான வரி செலுத்தும் அளவில் வருவாய் இல்லாதவர்கள் அதிலிருந்து விலக்கு பெற தங்களது வங்கி கணக்கின் தாய் கிளைக்குச் சென்று படிவம் 15G/H-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

வரி விலக்கு

வரி விலக்கு

தாய் வங்கி கிளைக்குத் தான் சென்று படிவம் 15G/H-ஐ சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் இருந்து விலக்கு அளித்துள்ள எஸ்பிஐ வங்கி நாடு முழுவதும் எந்த ஒரு எஸ்பிஐ வங்கி கிளைக்குச் சென்றும் படிவத்தினைச் சமர்ப்பிக்கலாம் என்ற வகையில் விதிகளில் மாற்றம் செய்துள்ளது.

அன்லைன்

அன்லைன்

படிவம் 15G/H-ஐ ஆன்லைனில் சமர்ப்பிக்கும் சேவையினை எஸ்பிஐ வழங்குகிறது. எஸ்பிஐ வங்கியின் இந்த முடிவு எஸ்பிஐ வங்கியில் பிக்சட் டெபாசிட் திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.

பணம் டெபாசிட்

பணம் டெபாசிட்

எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் தாய் கிளை இல்லாமல் பிற கிளைகளில் பணத்தினை டெபாசிட் செய்யும் போது அதிகபட்சம் 25,000 ரூபாய் வரையில் மட்டுமே செய்ய முடியும் என்று இருந்து வந்த வரம்பினையும் எஸ்பிஐ தளர்த்தியுள்ளது.

சிப் கார்டுகள்

சிப் கார்டுகள்

பாதுகாப்பு காரணங்களுக்காகப் பழைய மேக்னட்டிக் டேப் கார்டுகளை நீக்கி புதிய சிப் பொருத்தப்பட்ட டெபிட் கார்டுகளை இலவசமாக வழங்கும் பணியிலும் எஸ்பிஐ வங்கி செய்து வருகிறது. இதன் மூலம் ஸ்கிம்மிங் முறையில் டெபிட் கார்டு மோசடி செய்வது குறையும் என்று கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

New SBI ATM Withdrawal Limits Come Into Effect From October 31

New SBI ATM Withdrawal Limits Come Into Effect From October 31
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X