வல்லரசு நாடுகள் ஈரான் நாடு மீது விதித்த பொருளாதார மற்றும் வர்த்தகத் தடை இன்னும் நடைமுறையில் இருக்கும் நிலையில், கச்சா எண்ணெய் சந்தையில் இன்னும் பற்றாக்குறையின் அளவு குறையாமலே தான் உள்ளது. மேலும் OPEC அமைப்பு நாடுகள் மற்றும் ரஷ்யா தனது கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகத் தான் தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஈரான் பிரச்சனை
ஈரான் பிரச்சனை இன்னும் தீர்க்கப்படாத நிலையில் கச்சா எண்ணெய் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தும் சவுதி அரேபியா தனது உற்பத்தி அளவிளை அதிகரிக்க முடிவு செய்துள்ள காரணத்தால் தற்போது கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
கச்சா எண்ணெய் விலை
கடந்த ஒரு வாரமாகக் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை மட்டும் சுமார் 1 சதவீதம் வரையில் சரிந்தது.
மத்திய அரசு
இதன் மூலம் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 1.5 சதவீதமும், அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை 0.75 டாலர் வரையில் குறைந்துள்ளது.
இந்த விலை குறைப்பு மத்திய அரசு இந்திய மக்களுக்கு அளிக்கும் என நம்புவோம்.