2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்புகளை நீக்கியதை அடுத்து 15.30 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து இருந்தது.
மேலும் ஆர்பிஐ மதிப்பிழந்து ரூபாய் நோட்டுகளை அழிக்கும் பணிகள் 2018 மார்ச் மாதமே நிறைவடைந்ததாகச் சந்திரசேகரக் கவுட் என்ற ஆர்டிஐ ஆர்வலரின் கேள்விக்குப் பதில் அளித்துள்ளது.
திரும்ப வராத நோட்டுகளின் மதிப்பு
மத்திய வங்கி சந்திரசேகருக்கு அக்டோபர் 29-ம் தேதி அளித்த பதிலில் 10,720 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் திரும்பப் வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
செய்யப்பட்ட செலவு எவ்வளவு?
திரும்பப் பெறப்பட்ட ரூபாய் நோட்டுகளை இயந்திரங்கள் பயன்படுத்தி அழித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் சந்திரசேகர ரூபாய் நோட்டுகளை அளிக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்ற கேள்விக்கு ஆர்பிஐ சட்டப் பிரிவு 7(9)-ன் கீழ் இது குறித்த விவரங்களைத் தெரிவிக்க முடியாது என்று பதில் அளித்துள்ளனர்.
1000 எவ்வளவு?
மேலும் எவ்வளவு 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அழிக்கப்பட்டன என்ற விவரங்களையும் ஆர்பிஐ தெரிவிக்கவில்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
பண மதிப்பு நீக்கம்
2016-ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி 15,41,793 கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பு நீக்கப்பட்ட நிலையில் அதில் 99.3 சதவீதம் என 15,31,073 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதில் எவ்வளவு 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்ற விவரங்களை ஆர்பிஐ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.