மத்திய அரசு எல்பிஜி டீலர்களுக்கான கமிஷன் தொகையை உயர்த்திய காரணத்தால் மக்கள் சமையலுக்காகப் பயன்படுத்தும் சிலிண்டரின் விலை 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன் படி டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் விலை 505.34 ரூபாயில் இருந்து 507.42 ரூபாயாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி சிலிண்டர் டீலர்களுக்கு விநியோகத்திற்காக அளிக்கப்படும் கமிஷன் தொகை 14.2 கிலோ சிலிண்டருக்கு 48.89 ரூபாயில் இருந்து 50.58 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 5 கிலோ சிலிண்டருக்கு 24.20 ரூபாயில் இருந்து 25.29 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 1ஆம் தேதி மத்திய அரசு சிலிண்டரின் அடிப்படை விலையின் மீது விதிக்கப்பட்ட வரியின் காரணமாகச் சமையல் எரிவாயு விலை 2.94 ரூபாய் வரையில் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் 2 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த மாதத்தில் அறிவிக்கப்படும் 2வது விலை உயர்வாகும்.
ஜூன் மாதம் முதல் சிலிண்டர் விலை 16.21 ரூபாய் அதிகரித்துள்ளது.