தனியார் ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. மோடி அளிக்க இருக்கும் தேர்தல் பரிசு ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு ஊழியர்கள் போன்று தனியார் நிறுவன ஊழியர்களின் கிராஜூவிட்டி பணத்தினையும் மோடி அரசு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி இருந்த நிலையில் தேர்தலுக்கு முன்பு பதிய அதிரடி அறிவிப்பு ஒன்று வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

 

கிராஜூவிட்டி வரம்பினை உயர்த்திய போதே ஊழியர்கள் சங்கங்கள் கிராஜூவிட்டி கால வரம்பினை 5 வருடத்தில் இருந்து மூன்று ஆண்டுகளாகக் குறைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து இருந்தனர்.

தகவல்

தகவல்

தொழிலாளர் அமைச்சகத்திடம் இருந்து தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குத் தற்போது கிடைத்த புதிய தகவலின் படி ஊழியர்களின் சங்கங்களில் கோரிக்கையினை ஏற்று மத்திய அரசு இனி மூன்று வருடம் தொடர்ந்து ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாலே கிராஜூவிட்டி பணத்தினை அளிக்க முடிவு செய்துள்ளது என்று கூறுகின்றன.

தனியார் நிறுவன ஊழியர்கள்

தனியார் நிறுவன ஊழியர்கள்

மத்திய அரசு இந்த முடிவினை எடுத்தால் கோடிக்காணக்கான தனியார் நிறுவன ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

தேர்தல் அறிவிப்பு

தேர்தல் அறிவிப்பு

மேலும் மத்திய அரசு இந்தக் கிராஜூவிட்டி கால வரம்பு குறைப்பினை 2019-ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் முன்பு அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது என்றும் தகவல்கள் கூறுகின்றன.

கிராஜூவிட்டி என்றால் என்ன?
 

கிராஜூவிட்டி என்றால் என்ன?

கிராஜுவிட்டி என்பது ஊழியர்கள் நிறுவனத்திற்கு ஆற்றிய சேவைகளைக் கௌரவிக்கும் வகையில் நிறுவனத்தினால் அவர்களுக்கு வழங்கப்படும் பயனுள்ளதொரு பணி ஓய்வுத் தொகையே கிராஜூட்டி. ஊழியர்கள் பல்வேறு காரணங்களின் பொருட்டுத் தங்கள் பணியை விட்டு விலக நேரிடலாம், ஆனால் கிராஜுவிட்டித் தொகை குறிப்பாகப் பணி ஓய்வின் போது கைகொடுக்கக் கூடிய ஒன்று.

5 வருடங்கள்

5 வருடங்கள்

நிறுவனத்தில் ஒரு நபர் குறைந்தது 5 வருடங்களாவது பணியாற்றியிருக்க வேண்டும். எனினும், பணியில் இருக்கும் போதே ஒரு ஊழியர் மரணமடைய நேர்ந்தால், இந்த ஐந்து வருட காலம் என்ற விதிமுறை தளர்த்தப்படும். எனவே, அவ்வூழியரின் பணிக்காலம் 1 வருடம் என்ற அளவில் குறைவாகவே இருந்தாலும் கூட, முதலாவதாகக் கூறப்பட்ட விதிமுறை நிறைவேறும் பட்சத்தில் அவ்வூழியர் கிராஜுவிட்டி பெறும் தகுதியைப் பெறுவார். தற்போது அது 3 வருடமாகக் குறைக்கப்பட உள்ளது.

கிராஜுவிட்டி கணக்கிடுதல்

கிராஜுவிட்டி கணக்கிடுதல்

கிராஜுவிட்டி தொகையானது, ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்ததிலிருந்து அவர் நிறைவு செய்த ஒவ்வொரு பணி ஆண்டுக்கும் தலா 15 நாள் ஊதியம் என்ற அளவில் கணக்கிடப்பட்டு வழங்கப்படுகிறது (இங்கு ஊதியம் என்பது கடைசி 10 மாத பணிக்காலத்தின் போது பெறப்பட்ட சராசரி ஊதியம் என்பதாகக் கொள்ளப்படுகிறது).

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Modi Govt May Reduce Time Limit Of Gratuity Before 2019 Election

Modi Govt May Reduce Time Limit Of Gratuity Before 2019 Election
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X