இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி பிஎன்பி வங்கியின் காப்பீட்டு வர்த்தக நிறுவனமான பிஎன்பி மெட்லைப் இந்தியா நிறுவனத்தை மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிட ஒப்புதல் அளித்துள்ளது.
இந்நிறுவனம் ஜூலை மாதம் செபி அமைப்பிடம் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்காக விண்ணப்பங்களைக் கொடுத்த நிலையில் நவம்பர் 2ஆம் தேதி செபி observations செய்யத் துவங்கியுள்ளது. பங்குச்சந்தையில் ஒரு நிறுவனத்தைப் பட்டியலிடுவதற்கு முன்பு செபி தத்தம் நிறுவனத்தை அப்சோர்வேஷன் நடவடிக்கையில் வைக்கும்.

பிஎன்பி மெட்லைப் இந்தியா சமர்ப்பித்த அறிக்கையின் படி இந்நிறுவனம் தனது 24.64 சதவீத பங்குகளைப் பொதுச் சந்தையில் விற்பனை செய்ய உள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் 49,58,98,076 பங்குகள் சந்தைக்கு வருகிறது.
இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் இருக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், நியூ இந்தியா அசூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் காப்பரேஷன் ஆப் இந்தியா, ஹெச்டிஎப்சி ஸ்டாண்டர்ட் லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லாம்பார்ட் ஆகிய நிறுவனங்களுடன் தற்போது பிஎன்பி மெட்லைப் இந்தியாவும் இணைய உள்ளது.


Click it and Unblock the Notifications