நாட்டின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமான கோல் இந்தியா-வின் லாபம் எப்போதும் இல்லாத அளவிற்குச் சுமார் 8 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் இந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.
கடந்த நிதியாண்டின் செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் கோல் இந்தியா நிறுவனத்தின் லாபம் வெறும் 371 கோடி ரூபாயாக இருந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவு சுமார் 8 மடங்கு உயர்ந்து 3,085 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்றுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் வருவாய் இக்காலாண்டில் 22.3 சதவீதம் வரையில் உயர்ந்து 22,198 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி 10.6 சதவீதம் உயர்ந்து 256.5 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.