டெல்லி: அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுகமான வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், நாடு முழுவதும் தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களை அமைப்பதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் அரசாங்கம் புதிய திட்டத்தைத் தீட்டியுள்ளது.
மோடி அரசு
இந்தத் திட்டம் நிதி அயோக் உடன் கலந்தாலோசித்துக் கப்பல் அமைச்சகத்தின் இறுதி வடிவத்தை வழங்குவதற்காக முன்மொழியப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டுப் பொதுத்தேர்தலை ஓட்டி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யப் படுவதன் மூலம் மோடி அரசு வலுப்பெறும் என நம்பப்படுகிறது.
சலுகைகள்
அரசு தரப்பில் இந்தத் திட்டத்தில் நிதி சார்ந்த மற்றும் நிதி அல்லாத சலுகைகள் வழங்கப்படும். வரி விடுமுறை, மூலதன மானியம் மற்றும் ஒற்றைச் சாளர அனுமதி போன்ற சலுகைகள் கிடைக்கும்.
வேலைவாய்ப்பு மண்டலங்கள்
கப்பல் அமைச்சகம் 14 இடங்களில் இந்தத் தேசிய வேலைவாய்ப்பு மண்டலங்களை அமைக்க முன்மொழிந்துள்ளது. இந்த மண்டலங்கள் கடலோர மாநிலங்களில் மதிக்கப்படும் மற்றும் இந்த இடங்களுக்குச் செல்ல தனிவழி உருவாக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
ஒரு லட்சம் கோடி
செலவின நிதிக் குழுவிற்கு (EFC) ஒரு குறிப்பை ஒப்புதலுக்காக எழுதியுள்ளது கப்பல் அமைச்சகம். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவை ஆலோசனைக்கு அமைச்சரவை குறிப்பு அனுப்பப்படும்.
ஆரம்பக் கட்டத்தில் இந்த மண்டலங்களை அமைக்கச் சுமார் ஒரு லட்சம் கோடி செலவு ஆகும் எனவும், இது மத்திய மற்றும் மாநில அரசுகளால் பிரித்துக்கொள்ளப்படும். இந்த மண்டலங்களை அமைக்கக் கடலோர மாநிலங்கள் குறைந்தபட்சம் 2,000 ஏக்கர் நிலப்பரப்பை அளிக்கவேண்டும்.
நிதி பெறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும்
அது போக இந்தியா இந்தத் திட்டத்திற்காகப் பலதரப்பு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகும். என் என்றால் இந்த வேலைவாய்ப்பு மண்டலங்கள் அமைக்க அதிகபட்சமாக 4 லட்சம் கோடி வரை முதலீடுகள் தேவைப்படும்.
உள்கட்டமைப்பு வசதி
இந்த வேலைவாய்ப்பு மண்டலங்களின் உள்கட்டமைப்பு வசதிகளால் இங்குள்ள நிறுவனங்களுக்கு நீண்ட நாள் கடன் வசதி கிடைக்கும் அதை வைத்து அவர்கள் கூடுதல் தளங்களை உருவாக்கி பெரியளவில் வேலைகளைச் செய்து முடிக்கலாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications