பொதுத் துறை வங்கி நிறுவனங்கள் மட்டும் தான் வாரா கடனால் சிக்கு தவித்து வருகின்றன, தனியார் நிறுவனங்களிடம் குறைந்த அளவில் தான் வாரா கடன் வைத்துள்ளது என்று செய்திகள் வெளிவந்துகொண்டு இருக்கும் நிலையில் பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் வங்கிகளின் நிலை மோசமாக உள்ளதாக அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்று ஆர்டிஐ மூலமாகத் தனியார் வங்கி நிறுவனங்களின் வாரா கடன் குறித்து அறிக்கையை ரிசர்வ் வங்கியிடம் கேட்டு இருந்தது. அதன் தனியார் வங்கி நிறுவனங்கள் கடன் அளித்துள்ள 18 துறைகளில் 14 துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் வாரா கடன் அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது என்றும் அதில் 2018-ம் ஆண்டு விதிவிலக்கல்ல என்று தகவல் வந்துள்ளது.
தனியார் வங்கிகள் அளவில் சிறியவை
பொதுத் துறை வங்கி நிறுவனங்களினை விடத் தனியார் வங்கி நிறுவனங்களின் அளவு குறைவு என்பதால் வாரா கடன் குறைவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் சிறிய அளவிலான தனியார் வங்கிகளில் வாரா கடனின் சதவீதம் பொதுத் துறை வங்கிகளை விட வேகமாக வளர்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
வாரா கடன் நிகழ்வுகள்
தனியார் வங்கி நிறுவனங்களில் 70 நிகழ்வுகளில் வாரா கடன் அதிகரித்துள்ளதாகவும், அதே நேரம் மீதம் உள்ள 20 நிகழ்வுகளில் குறைந்துள்ளதாகவும், பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் 75 நிகழ்வுகளில் வாரா கடன் அதிகரித்தும், 15 நிகழ்வுகளில் சரிந்தும் உள்ளது.
கட்டுமான துறை
கடந்த 5 ஆண்டுகளில் கட்டுமான துறையில் பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் துறை வங்கி நிறுவனங்களின் வாரா கடன் அளவு அதிகரித்துள்ளது என்றும் அதிலும் குறிப்பிடத்தக்க விதமாக மின்சாரம், டெலிகாம், சாலை, துறைமுகம், மருத்துவமனை மற்றும் கட்டிட துறைகளுக்கு வழங்கப்பட்ட கடன் மிக மோசமான நிலையில் உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
வாரா கடன் அதிகரிப்பு
2014-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டுப் பொதுத் துறை வங்கி நிறுவனங்களை விடத் தனியார் துறை வங்கி நிறுவனங்களின் வாரா கடன் அளவு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. தனியார் வங்கி நிறுவனங்களில் கட்டுமான துறையில் 220 சதவீத வாரா கடன் அதிகரிப்பு என்றால் பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் 112 சதவீதமாகவே உள்ளது. 2018-ம் ஆண்டு வரை தனியார் நிறுவனங்களின் வாரா கடன் அளவு அதிகரித்துக்கொண்டு தான் வருகிறது.
ஆண்டு வாரியான நிலவரம்
கட்டுமான துறையில் 2015-ம் நிதி ஆண்டில் தனியார் வங்கிகளின் வாரா கடன் 87 சதவீதமாக இருந்துள்ளது, பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் 69 சதவீதமாக இருந்துள்ளது. 2016-ம் ஆண்டுத் தனியார் வங்கிகளின் வாரா கடன் 216 சதவீதமும், பொதுத் துறை வங்கி நிறுவனங்களின் வாரா கடன் 158 சதவீதமாகவும் இருந்துள்ளது. 2017-ம் ஆண்டுத் தனியார் வங்கிகளின் வாரா கடன் 71 சதவீதமும்,, பொதுத் துறை வங்கி நிறுவனங்களில் 10 சதவீதமும் அதிகரித்து இருந்தது. 2018-ம் ஆண்டின் அரையாண்டு இறுதி வரையில் தனியார் வங்கி நிறுவனங்களின் வாரா கடன் 125 சதவீதமும், பொதுத் துறை வங்கி நிறுவனங்களின் 121 சதவீதமும் வாரா கடன் அதிகரித்துள்ளது.
அதிர்ச்சி அளிக்கும் துறைகள்
அதிர்ச்சி அளிக்கும் விதமாகப் பெட்ரோலியம், அணுத் துறை போன்றவற்றில் தனியார் வங்கி நிறுவனங்களின் வாரா கடன் 2018-ம் ஆண்டு 1,2006 சதவீதத்தினை எட்டியுள்ளது. இதுவே பொதுத் துறை வங்கிகளில் 34 சதவீதம் சரிந்துள்ளது. சிமெண்ட் துறையில் தனியார் வங்கிகளின் வாரா கடன் 16,585 சதவீதம் அதிகரித்துள்ளது. பொதுத் துறை வங்கிகளில் 73 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ
வங்கி திவால் சட்டம் போன்றவற்றின் கீழ் வாரா கடனை குரைக்கப் பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வாரா கடன் வசூலிப்பில் ஆர்பிஐ கராராகவும் உள்ளது. இது வங்கிகளுக்குத் தலைவலியாக மாறியுள்ளது.
தனியார் வங்கிகளில் உள்ள வாரா கடன் குறைப்பிற்கு முழுப் பொறுப்பினையும் ஆர்பிஐ எடுத்துக்கொண்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் மத்திய வங்கி வாரா கடனை வகைப்படுத்திப் படிப்படியாக வசூலிக்கும் பணிகளில் இரங்கியுள்ளது.