ஆந்திராவில் இருந்து தனியாகப் பிரிந்த தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும், டிஆர்எஸ் கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் இம்மாநிலத்தில் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலையொட்டி கஜ்வெல் தொகுதியில் இருந்து போட்டி போட முடிவு செய்து அதற்கான மனுவையும் கொடுத்துள்ளார். இந்த மனுவோடு சந்திரசேகர ராவ் மற்றும் அவரது மனைவியின் சொத்து மதிப்பையும் கொடுத்துள்ளார்.
20.60 கோடி ரூபாய்
தற்போது சந்திரசேகர ராவ் கொடுத்துள்ள விபரங்கள் அடிப்படையில் இவருக்கு 20.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளதாகவும், இவருக்கும், இவரது மனைவிக்கும் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
விவசாய நிலம்
கேசிஆர் என அழைக்கப்படும் சந்திரசேகர ராவ் அவர்களுக்கு 10.40 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், 12.20 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்களும் உள்ளதாக அறிவித்துள்ளார். இதில் முக்கியமான அசையா சொத்தாக 54 ஏக்கர் விவசாய நிலம் 6.50 கோடி மதிப்புடையது எனத் தெரிவித்துள்ளார்.
மனைவி கே. சரோஜா
இவரது மனைவி கே. சரோஜா பெயரில் 94.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளதாக அறிவித்துள்ளார்.
விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம்
2017-18ஆம் நிதியாண்டில் வருடாந்திர வருமானமாக வருடத்திற்கு 2.07 கோடி ரூபாய் கணக்கு காட்டப்பட்டுள்ளது. இதில் 91.52 லட்சம் ரூபாய் விவசாயத்தின் மூலம் கிடைத்த வருமானம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கான பிராட்காஸ்டிக் பிரைவேட் லிமிடெட்
மேலும் தெலுங்கான பிராட்காஸ்டிக் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 4.71 கோடி ரூபாய் முதலீடும், 5.63 கோடி ரூபாய் வங்கி வைப்பு நிதியாகவும் வைத்துள்ளார். இதேபோல் ஹைதராபாத் கரிம்நகரில் 5.10 கோடி ரூபாய் மதிப்பிலான வீடும் வைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
64 வழக்குகள்
மேலும் கேசிஆர் பெயரில் சுமார் 64 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலானவை தெலுங்கானா பிரிவினையில் போது பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.