நாட்டின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனம் கடந்த வருடத்தை விடவும் சுமார் 26 சதவீதம் அதிக லாபத்தை அடைந்துள்ளது.
இதன் மூலம் இக்காலாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா சுமார் 1,779 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை அடைந்துள்ளது.
பயணிகள் வாகன பிரிவு
இக்காலாண்டில் பயணிகள் வாகன பிரிவின் விற்பனை அளவு 10 சதவீதம் வளர்ச்சி என்ற இலக்கை நிர்ணயம் செய்துகொண்ட மஹிந்திரா, விழாக் காலத்தில் நினைத்ததை விடவும் குறைவான விற்பனை வளர்ச்சியை மட்டுமே பதிவு செய்துள்ளது. இது இக்காலாண்டில் இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.
வருமானம்
கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் வருமானம் 6 சதவீதம் வரை உயர்ந்து 12,790 கோடி ரூபாய் அளவில் உயர்ந்துள்ளது.
யுடிலிட்டி வாகனம்
மேலும் யுடிலிட்டி வாகன பிரிவில் இந்நிறுவனத்தின் விற்பனை 9.5 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இக்காலாண்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் அதிகமாக இருந்தது தான்.
பெட்ரோல், டீசல்
பெட்ரோல், டீசல் விலையின் அதிரடி உயர்வால் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்ட அனைவரும் தங்களது முடிவை மாற்றிக்கொண்டனர்.