தமிழ்நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் லைப் இன்சூரன்ஸ் அல்லாத காப்பீட்டு நிறுவனமான ராயல் சுந்தரம் ஜெனரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை Ageas இன்சூரன்ஸ் இண்டர்நேஷனல் என்ற பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பங்கு விற்பனைக்காகச் சுந்தரம் பைனான்ஸ் மற்றும் அதன் கிளை நிறுவனங்களும் Ageas இன்சூரன்ஸ் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 1,520 கோடி ரூபாய்.
2018ஆம் ஆண்டின் மார்ச் நிலவரத்தின் படின் ராயல் சுந்தரம் நிறுவனத்தில் சுமார் 75.90 சதவீத பங்குகளைச் சுந்தரம் பைனான்ஸ் நிறுவனமும், மீதமுள்ள பங்குகளை இக்குழுமத்தின் மற்ற நிறுவனங்களான இந்தியா மோட்டார் பார்ட்ஸ், டிவிஎஸ் அண்ட் சன்ஸ், சந்தரமாஸ் மற்றும் இக்குடும்பத்தின் 3 பேரிடம் இருந்தது.
தற்போது செய்யப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் சுந்தரம் பைனான்ஸ் சுமார் 25.90 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
Ageas இன்சூரன்ஸ் நிறுவனம் ஏற்கனவே IDBI பெடரல் இன்சூரன்ஸ் கோ லிமிடெட் நிறுவனத்துடன் சேர்ந்து இந்தியாவில் வர்த்தகம் செய்து வரும் நிலையில் இந்தப் பங்கு கொள்முதல் மூலம் இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது.