நீங்கள் மத்திய அரசு ஊழியரா? அப்படியானால் பாம்பே உயர் நீதிமன்றத்திற்கு ஓரு நன்றியைப் போட்டுவிடுங்கள். நீதிமன்றத்தின் உத்தரவின் படி மத்திய அரசு ஊழியர்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்ற காரணத்திற்காகச் சம்பளம் இல்லை என்று மறுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் ஏற்கனவே வங்கி கணக்கில் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் பாம்பே உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளால் மத்திய அரசு தங்களது ஊழியர்களுக்கு எந்த ஒரு தடங்களுமின்றிச் சம்பளத்தினைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மும்பை துறைமுக ஊழியர்
துறைமுக ஊழியர் ஒருவருக்கு 2016-ம் ஆண்டு முதல் வங்கி கணக்கில் ஆதார் இணைக்கவில்லை என்ற காரணத்திற்காகச் சம்பளத்தினைத் தராமல் இருந்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்த நிலையில் அதற்குப் பாம்பே உயர் நீதிமன்றம் இப்படித் தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மத்திய அமைச்சகம்
மத்திய கப்பல் அமைச்சகம் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆதார் கார்டு உடன் சம்பள வக்கி கணக்கினை இணைக்க வேண்டும் என்று ரமேஷ் பவுர்லே என்ற ஊழியருக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
மறுப்பு
ஆதார் கார்டுடன் வங்கி கணக்கை இணைப்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது என்று அதைச் செய்ய மறுத்துள்ளார் ரமேஷ் இதனால் இவருக்கு 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் சம்பளம் அளிப்பதை நிறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தீர்ப்பு
இதனை அடுத்து ரமேஷ் வழக்கு தொடர்ந்த நிலையில் அந்த மத்திய அரசு அவருக்கு நிலுவை தொகையுடன் சம்பளத்தினை வழங்க வேண்டும் என்றும், மேலும் இந்த வழக்கு குறித்த இறுதிக் கட்ட விசாரணை 2019 ஜனவர் 8-ம் தேதி வரி ஒத்தி வைக்கப்படுவதாகவும் பாம்பே உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நிலுவை தொகையுடன் சம்பளம்
மும்பை துறைமுக நிர்வாகம் ரமேஷின் சம்பளத்தினை 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகளின் படி தற்போது அவருடைய சம்பளத்தினை நிலுவை தொகையுடன் வழங்கியுள்ளது.