கஜா புயலால் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகப் பரிய அளவில் பாதிப்படைந்துள்ள நிலையில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளப் பொதுமக்களிடம் இருந்து தமிழ் நாடு அரசு உதவியை நாடுகிறது.
தமிழ் நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்பனவே புயல் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளின் நிவாரண நிதிக்கு 1000 கோடி ரூபாயினை அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
முதல்வர் புயல் நிவாரண நிதிக்கு
இந்நிலையில் மக்கள் நலனில் அக்கறை செலுத்தும் குடிமக்கள், நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளார்கள் தமிழக அரசு எடுத்து வரும் மாபெரும் நிவாரணம் மற்றும் மறு சீரமைப்பு நடவடிக்கைகளுக்கு நன்கொடைகள் மூலம் உதவ https://ereceipt.tn.gov.in/cmprf/cmprf.html என்ற இணைப்பிற்குச் செல்லவும்.
வரி விலக்கு
முதல்வரின் புயல் நிவாரண நிதிக்கு உதவி செய்யும் தொகைக்கு வருமான வரிச் சட்டப்பிரிவு 80ஜி படி வரி விலக்கு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கி கணக்கு மூலம் நிவாரண நிதி அளித்தல்
மின்னஞ்சல் முகவரி: [email protected]
Electronic Clearring System(ECS) மூலம் வங்கிக்கு நேரடியாக அனுப்ப வேண்டிய விவரம்:
வங்கி பெயர்: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி.
கிளை: தலைமைச் செயலகம், சென்னை - 600009.
சேமிப்பு கணக்கு எண்: 117201000000070.
IFSC: IOBA0001172,
CMPRF PAN: AAAGC0038F