இந்தியாவில் பணப் பரிவர்த்தனை சேவை வழங்கி வரும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தான் அது குறித்த தரவுகளைச் சேமிக்க வேண்டும் என்ற விதியால் உள்ளூர் பணப் பரிவர்த்தனை சேவை நிறுவனங்களுடன் போட்டி போடுவதில் சிக்கல் ஏற்படும் என்று விசா கார்டு நிறுவனம் அச்சம் அடைந்துள்ளது.
ரூபே
இந்திய அரசாங்கத்தின் கீழ் உள்நாட்டிலேயே முழுமையாகத் தொடங்கப்பட்ட பணப் பரிவர்த்தனை சேவைப் பிரிவான ரூபேவால் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்களின் சந்தை பெறும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் மாஸ்டர்
இந்நிலையில் விசா மற்றும் மாஸ்டர் கார்டு நிறுவனங்கள் ஆர்பிஐ விதிகளின் படி இந்தியாவிலேயே பரிவர்த்தனி விவரங்களைச் சேமித்து வைக்க வேண்டும் என்றால் தங்களது செலவுகள் அதிகரிக்கும் என்றும் உள்ளூர் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாத நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
விசா
விசா நிறுவனத்திற்கு இந்தியாவில் மட்டும் பிரச்சனை அல்ல. இதே போன்று சீனா, இந்தோனேசியா, ரஷ்யா, தாய்லாந்து மற்றும் வியாட்நாம் உள்ளிட்ட நாடுகளிலும் உள்ளூர் நிறுவனங்களுக்கு அந்த நாடுகளின் அரசு அளிக்கும் முக்கியத் துவத்தினால் பாதிப்பினை சந்தித்து வருகிறது.
இந்திய சந்தை
விசா நிறுவனத்திற்கு உலகளவில் இந்திய பணப் பரிவர்த்தனை சந்தை முக்கியமான ஒன்று. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி எடுத்துள்ள இந்த அதிரடி முடிவினால் அடுத்து என்ன செய்வது என்று அறியாமல் முழுத்தி வருகிறது.
பில்டெஸ்க்
மேலும் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளைச் சமாளிக்க விசா நிறுவனம் இந்தியாவின் பில் டெஸ்க் நிறுவனத்தில் மிகப் பெரிய தொகையினை முதலீடு செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.