படேல் சிலையைத் தொடர்ந்து புத்தர் சிலைக்குத் திட்டமிடும் குஜராத்.. என்ன பட்ஜெட் தெரியுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேல் சிலையை 3,000 கோடி ரூபாய் செலவில் திறந்து சர்ச்சைக்குள்ளானதே இன்னும் ஓயவில்லை. இந்நிலையில் குஜராத்தில் புத்தருக்குச் சிலை வைக்க முடிவு செய்துள்ளனர்.

 

உலகின் மிகவும் உயரமான படேல் சிலையினை 182 அடி உயரத்தில் அமைத்துள்ள நிலையில் புத்தர் சிலையினை 80 அடி உயரத்திற்கு அமைக்க உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றனர்.

 
படேல் சிலையைத் தொடர்ந்து புத்தர் சிலைக்குத் திட்டமிடும் குஜராத்.. என்ன பட்ஜெட் தெரியுமா?

ஆனால் படேல் சிலை போன்று புத்தர் சிலையினை நிறுவ எந்த ஒரு அரசும் முடிவு செய்யவில்லை. புத்த அமைப்பான சங்காக்யா இந்தச் சிலையினை வைக்க முடிவு செய்துள்ளது. தொண்டு நிறுவனமான இது அரசிடம் இருந்து இதற்காக நிலத்தினை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது.

படேல் சிலையைச் செய்த நொய்டாவை சேர்ந்த சிற்பியான ராம் சுதாரிடமே புத்தர் சிலையினை வடிவமைப்பதற்கான பொறுப்புகளும் வழங்கப்பட்டுள்ளது. புத்தர் சிலை தற்போது பீகார் மற்றும் உத்திர பிரதேசத்தில் மட்டுமே உள்ள நிலையில் குஜராத்தில் சங்காக்யா இந்தச் சிலையினை நிறுவ உள்ளது.

படேல் சிலை மற்றும் அதனைச் சுற்றுலா மயமாக்க 3,000 கோடியை அரசு செலவு செய்த நிலையில் புத்தர் சிலைக்கு எவ்வளவு செலவாகிறது போன்ற விவரங்கள் தெரியவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After Statue of Unity, Gujarat plans giant Buddha statue

After Statue of Unity, Gujarat plans giant Buddha statue
Story first published: Friday, November 23, 2018, 16:00 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X