2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி 10.5 சதவீதம் உயர்ந்து 21 மில்லியன் டன் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டில் இதுவே அதிகம் என்று தரவுகள் கூறுகின்றன.
இந்தியாவில் பெட்ரோல் பயன்பாடு ஒவ்வொரு நாளும் 4 சதவீதம் உயர்ந்து அக்டோபர் மாதம் 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் இந்தியாவின் உள்நாட்டுக் கச்சா எண்ணெய் உற்பத்தி 7 சதவீதம் சரிந்துள்ளது.
தற்போது இந்தியா தனது 83.5 சதவீத கச்சா எண்ணெய் தேவைக்கு இறக்குமதியினையே நம்பி இருக்கின்றது.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு
டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்புச் சரிவு போன்ற காரணங்களினால் 2018-2019 நிதி ஆண்டில் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி மீதான செலவுகள் 55 சதவீதம் வரை உயரும் என்று கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரூபாய் மதிப்பின் தாக்கம் எப்படி?
இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு 6,158 கோடியாக இருக்கும் போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 1 ரூபாய் சரியும் போது 6,639 கோடி ரூபாயாகச் செலவு அதிகரித்துள்ளது.
இயற்கை எரிவாயு
இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியும் மோசமாக உள்ளது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் 2,808 mmscm எரிவாயு உற்பத்தி செய்த நிலையில் இந்த ஆண்டு 2,798 mmscm ஆகச் சரிந்துள்ளது. அதே நேரம் இந்தியாவின் இயற்கை எரிவாயு இறக்குமதி 46.9 சதவீதத்தில் இருந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 45.6 சதவீதமாகச் சரிந்துள்ளது.
பிரதமர் மோடியின் வாக்குறுதி
பிரதமர் மோடி அவர்கள் 2015-ம் ஆண்டு இந்தியாவின் எண்ணெய் மற்றும் எரிவாய் இறக்குமதி தேவையினை 2022-ம் ஆண்டுக்குள் 77 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாகவும், 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீதமாகவும் குறைப்பேன் என்றும் வாக்குறுதி அளித்து இருந்தார். ஆனால் அது 2018-ம் ஆண்டு 83.5 சதவீதமாக அதிகரித்து இருப்பது மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

OMCs பங்குகளுக்கு செக் வைத்த கச்சா எண்ணெய்! BPCL,HPCL பங்குகள் கடும் வீழ்ச்சி:யுபிஎஸ் கொடுத்த ஷாக்!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறதா? கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் முக்கிய அப்டேட்

SBI முதல் BoB வரை..பொதுத்துறை வங்கி பங்குகளில் ஏன் ரத்த ஆறு? முக்கிய காரணங்கள்இதோ?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications