மத்திய அரசுக்கு 2019-ம் ஆண்டுத் தேர்தலுக்கு முன்பு ஆர்பிஐ அளிக்க இருக்கும் உபரி நிதி தேவைப்படுகிறது அதனால் தான் ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடியினை அளித்து வருகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.
இந்நிலையில் அருண் ஜேட்லி அன்மையில் அளித்த பேட்டி ஒன்றில் அடுத்த 6 மாதத்திற்கு ஆர்பிஐ அளிக்க இருக்கும் நிதி எங்களுக்குத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
மத்திய அரசு
மத்திய அரசு ஆர்பிஐ, சிபிஐ மற்றும் சுயாட்சி அதிகாரம் படைத்த அரசு நிர்வாகங்களில் தங்களது தலையீட்டினை வரம்புக்கு மீறிச் செலுத்துவதாகப் புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கிறது என்ற விமர்சனத்திற்குப் பதில் அளித்த அருண் ஜேட்லி மத்திய வங்கியை நாங்கள் மதிக்கிறோம் அதற்காகச் சில துறைகளில் பணப்புழக்கம் இல்லாத போது கடன் தேவைப்படும் போது அதில் தலையிடுவதில் அரசின் கடமை என்றும் கூறினார்.
ஆர்பிஐ வாரிய கூட்டம்
10 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்பிஐ வாரிய கூட்டத்தில் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இடையில் இருந்து வந்த தவறான புரிதல்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டது.
சிதம்பரம்
மத்திய அரசு ரிசர்வ் வங்கியை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு சென்று அவர்களிடம் உள்ள உபரி தொகையினைக் கைப்பற்றப் பார்க்கிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப சிதம்பரம் விமர்சித்து வந்தார்.
இதனால் 2019 தேர்தலுக்கு முன்பு வர உள்ள இடைக்காலப் பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையினைக் குறைக்கவே ஆர்பிஐயிடம் இருந்து மத்திய அரசு உபரி நிதியை வேகமாகப் பெற முயல்கிறது என்று விமர்சிக்கப்பட்டது.
எதிரி பங்குகள்
மறு பக்கம் பட்ஜெட்டில் உள்ள பற்றாக்குறையினைத் தவிர்க எதிரி பங்குகளை விற்கும் நடவடிக்கையிலும் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதன் கீழ் மத்திய அரசுக்கு 3000 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என்றும் அது பட்ஜெட் நிதிக்குப் பயன்படுத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications