மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் என்பிஎஸ் அடிப்படையிலான புதிய பென்ஷன் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் அவ்வப்போது போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த கெஜிர்வால் பழைய பென்ஷன் திட்டத்தினை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளார்.
தனது மாநிலம் மாநிலம் மட்டும் இல்லாமல் பாஜக ஆட்சி இல்லா மேற்கு வங்கம், கேரளா, ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலத்தைச் சேர்ந்த பிற மாநில முதல்வர்களிடமும் இது குறித்து வழியுறுத்துவதாகவும் கெஜிர்வால் கூறியுள்ளார்.
டெல்லி
டெல்லி சட்ட மன்றம் அடுத்த முறை கூடும் போது பழைய பென்ஷன் திட்டத்தினை மீண்டும் அமலுக்குக் கொண்டு வருதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறியுள்ளார்.
ஆனால் பழைய பென்ஷன் திட்டம் குறித்த பரிந்துரைக்கு மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்ட பிறகு அதனை மத்திய அரசுக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
அரசுச் ஊழியர்கள்
அரசு ஊழியர்களுக்கு அரசையே மாற்றும் அதிகாரம் உள்ளது. தான் அரசை எச்சரிக்கிறேன். இன்னும் 3 மாதத்தில் இது குறித்த முடிவினை மத்திய அரசு எடுக்காவிட்டால் 2019 பொதுத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இதனைப் பெரிது படுத்தும் என்றும் கெஜிர்வால் கூறியுள்ளார்.
துரோகம்
புதிய பென்ஷன் திட்டம் அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு செய்யும் துரோகம் மற்றும் மோசடி என்றும் கெஜிர்வால் கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதிய பென்ஷன் திட்டம்
2004-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய பென்ஷன் திட்டத்தின் கீழ் ஊழியர்கள் பென்ஷன் பங்களிப்பு மற்றும் அரசு பங்களிப்பு என இரண்டையும் சேர்த்து என்பிஎஸ் மூலம் பங்கு சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில் முதலீடு செய்து லாபம் அளிப்பதன் மூலம் வரும் தொகையினைப் பென்ஷனாக அளிப்பது ஆகும்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications