உலகத்தின் பெரும் வல்லரசு நாடுகளில் இயங்கிவரும் அதிவேக ரயில் பயணங்களை போல இந்தியாவிலும் கூடிய விரைவில் நாடு விட்டு நாடு செல்லும் பொது கூட ரயிலேயே பயணிக்கலாம். ஒரு உதாரணமாக பாரிஸில் இருந்து லண்டனிற்குச் செல்ல அதிவேக ரயில்கள் உள்ளன. அதே போல இந்தியாவிலும் வரப் போகிறதாம். இந்த வசதி மும்பை முதல் ஐக்கிய அரேபிய அமீரகம் இடையே செயல்படப்போகிறது.
துபாயின் முன்னணி பத்திரிகையில் வந்துள்ள செய்தி படி, யூஏஇ-யை சார்ந்த நிறுவனமான நேஷனல் அட்வைசர் புயுரோ இந்தியா மற்றும் ஐக்கிய அரேபிய அமீரகத்தை இணைக்க ஒரு அதிவேக ரயில் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
புஜைரா துறைமுகம்
இந்த இணைப்பின் மூலம் இருநாட்டிற்கு இடையே உள்ள வர்த்தகத்தை வலுப் படுத்தும். மேலும் புஜைரா துறைமுகத்தில் இருந்து இந்தியாவிற்கு எண்ணெய் இறுக்கமதியாகும் மற்றும் நர்மதா நதியில் உள்ள உபரிநீர் அந்நாட்டிற்கு ஏற்றுமதியாகும்.
கல்ப் கார்பொரேஷன் கவுன்சில்
அதுமட்டும் இல்லாமல் கல்ப் கார்பொரேஷன் கவுன்சிலில் உள்ள துணை நிறுவனங்களும் இந்தத் திட்டம் மூலம் அவர்களின் ஏற்றுமதி இறக்குமதி மேம்படுத்தப்படும் என நேஷனல் அட்வைசர் புயுரோ நிறுவனத்தின் தலைவர் அப்துல்லா அல்ஷேஹி தெரிவித்தார்.
2,000 கிலோமீட்டர்
அறிக்கையின் படி இந்தப் பயணத்தின் மொத்த தூரஅளவு சுமார் 2,000 கிலோமீட்டர் ஆகும். பயணிகள் வசதி மட்டும் இல்லாமல் இந்தியாவில் இருந்து யூஏஇ-க்கு பொருட்களின் பரிமாற்றம் மற்றும் யூஏஇ-ல் இருந்து இந்தியாவிற்குக் குழாய்கள் வழியாக எண்ணெய் வந்துசேரும்.
சீனா மற்றும் ஜப்பான்
இந்த மிதக்கும் ரயிலிற்குக் காந்தவிசை சக்தி மூலம் (Magnetic Leviation) முறை மூலம் அதிவேகத்தில் இயக்கப்படும். இந்த ரயில் திட்டத்தின் பணிகள் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் செயலபட்டுவருகின்றன.


Click it and Unblock the Notifications