பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலகோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடியின் தலைமறைவுத் திட்டம் பிரதமர் மோடிக்கும், நிதி அமைச்சர் அருண் ஜேட்லிக்கும் முன்பே தெரியும் என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 8 மாதங்களுக்கு முன்பே வருமான வரித்துறை இது தொடர்பான தகவலை மத்திய அரசிடம் தெரிவித்ததாக கூறியுள்ளது வருமான வரித் துறை.
வங்கி மோசடி
23 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி மூலம் இந்திய வங்கித் துறையையே நிலை குலைய வைத்தவர் நிரவ் மோடி. வைர வியாபாரியான இவர் தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் இணைந்து நடத்திய கையாடல் பஞ்சாப் நேஷனல் வங்கியை வெகுவாக பாதித்தது.
தப்ப உதவினாரா மோடி
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜூவாலா, வங்கி மோசடி விவகாரத்தை எழுப்பி பா.ஜ.கவை கடுமையாக சாடினார். மோசடியில் ஈடுபட்ட நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் இந்தியாவை விட்டு தப்பிச் செல்ல இருப்பதாக 8 மாதங்களுக்கு முன்பே வருமானவரித்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் தெரிவித்து விட்டனர். அவர்கள் இருவரும் எப்படி தலைமறைவு ஆனார்கள் என்பது குறித்து பிரதமர் மோடிக்கும், அருண்ஜேட்லிக்கும் நன்கு தெரியும் என சுர்ஜூவாலா குற்றம் சாட்டினார்.
இவரது பங்கு என்ன
நேரடி வரிகள் வாரியத்தின் (Central Board Of Direct Taxes) அப்போதைய தலைவராக இருந்த சுஷில் சந்திராவுக்கு, நிரவ் மோடியும், மெகுல் சோக்சியும் தப்பிச் செல்வது குறித்து தெரியாதா...? எட்டு மாதங்களுக்கு முன் அவர்களைப் பற்றி அரசுக்கு தகவல் சொல்லிவிட்டு அமைதியாக இருந்துவிட்டீர்களா..?, இதில் உங்கள் பங்கு என்ன என்றும் கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங்
விசாரணையில் தாமதம்
ஆண்டின் தொடக்கத்தில் தெரிய வந்த நிரவ் மோடியின் வங்கி மோசடி குறித்து, காலதாமதமாக இண்டர்போலை அணுகி, லண்டனில் இருந்து நாடு கடத்த கேட்டுக் கொண்டது ஏன் என்று வினவியுள்ளார். சட்ட விரோதமாக பணப் பரிமாற்றம் செய்த 6,400 கோடி ரூபாயை, வெளிநாடுகளில் உள்ள டம்மி நிறுவனங்களில் அவரும் அவரது குடும்பத்தினரும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ததை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊழியர்களுக்கும் தொடர்பு
நிரவ் மோடி, மெகுல் சோக்சி மட்டுமல்ல பஞ்சாப் நேஷனல் பேங்கில் உள்ள பல ஊழியர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. மவுனமாக இருக்கும் மோடி மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வரை இந்த சர்ச்சை தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications