இதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் அனைவராலும் செல்லமாக தல என்று அழைக்கப்படும் தோனி தான் ஜார்கண்ட் மாநிலத்தில் அதிக தொகையை தனிநபர் வரியாகச் செலுத்தியுள்ளார். கடந்த 2017-2018 நிதி ஆண்டில் மட்டும் அவர் செலுத்திய வரி ரூ.57 கோடிப்பு.

இந்தச் செய்தியை வருமான வரித் துறை கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மாநிலத்தில் அதிக வரி செலுத்தியவரை பெருமைப்படுத்துவதற்காக அவர் பெயரை அறிவித்தோம் என வருமான வரி துறை குறிப்பிட்டுள்ளது.

இதுலயும் தோனிக்குத் தான் முதலிடம்... எதில் தெரியுமா?

தோனியை தொடர்ந்து நந்த கிஷோர் செளத்திரி மற்றும் உதய் ஷங்கர் பிரசாத் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளனர்.

கார்ப்பரேட் வரி வகையில் ராஞ்சியை தலைமையகமாக கொண்ட சென்ட்ரல் கோல் ஃபீல்ட்ஸ் முதல் இடம். அதைத் தொடர்ந்து டிம்கென் இந்தியா மற்றும் ஜாமிபோல் நிறுவனங்கள் அதிக வரி செலுத்தி இடம் பிடித்துள்ளனர்.

கூட்டு நிறுவனங்களில் (Partnership firm) அதிகப் படியான தொகையை வரியாகச் செலுத்தி முதல் மூன்று இடங்களைப் பிடித்து நிறுவனங்கள் - பிக் ஷாப், கஷ்யப் நினைவு கண் மருத்துவமனை மற்றும் பிரதர்ஸ் அகாடமி ஆகும்.

இதில் தோனியை தவிர மத்த எந்தத் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் எவ்வளவு வரி செலுத்தி உள்ளனர் என்கிற தகவலை வருமான வரித்துறை வெளியிடவில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+