ரெப்போ ரேட் 6 .50 விழுக்காடாகவே நீடிக்கும் என்று அறிவித்துள்ள ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு, ரிவர்ஸ் ரெப்போ ரேட்டை 6.25 ஆகவே இருக்கும் என்று அறிவித்துள்ளது. எஸ் எல்.ஆர் எனப்படும் Statutory liquitity rate வில் அடிப்படைப்புள்ளிகளில் 25 குறித்து 19.25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.
பணவியல் கொள்கை கூட்டம்
மும்பையில் நடைபெற்ற ஆர்.பி.ஐயின் பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்தில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. பொருளாதாரம் எதிர்நோக்கவுள்ள சவால்கள், உள்நாட்டு உற்பத்தி விகிதம், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்க வேண்டிய மூலதன உதவிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜிடிபி
2020 ஆம் நிதி ஆண்டின் முதல் பாதியில் ஜி.டி.பி வளர்ச்சி 7.5 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டது போலவே கேஸ் ரிசர்வ் ரேஷியோவில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.. 2019 ஆம் நிதி ஆண்டின் இரண்டாவது பாதியில் பண வீக்க விகிதத்தினை 3.9-4.5 லிருந்து 2.7-3.2 விழுக்காடாக குறைக்க முடிவு செய்யப்பட்டது.
சவால்
எதிர்பாராமல் நிகழும் உணவுப்பொருள் பணவீக்கம், எண்ணெய் விலையில் ஏற்படும் தாறுமாறான போக்குகளால் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவது சவாலாக இருப்பதாக பணவியல் கொள்கைக் குழு தெரிவித்துள்ளது. வர்த்தக மோதல்களால் ஏற்படும் உலகளாவிய நிதி நிவைமை மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவை . உள்நாட்டு பொருளாதாரத்தில் ரிஸ்vக்கை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
காரணிகள்
உலகளாவிய தேவையைப் பொறுத்து மாறும் கச்சா எண்ணெய் விலை, புவியியல் ரிதியான பதற்றங்கள்,, ஒபெக் நாடுகளின் முடிவுகள் இடைப்பட்ட காலத்தில் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி
ராபி பருவ சாகுபடியில் பாதிக்கப்படும்போது நகர்ப்புறத்தின் தேவைகள் அதிகமாகும் என்று தெரிவித்துள்ள ரிசர்வ் வங்கி, நிதிச்சந்தையின் நிலையற்ற தன்மை, உலகளாவிய தேவையில் நிலவும் மந்தநிலை, வர்த்தக மோதல் ஆகியவை ஏற்றுமதியை பாதிப்பதாக இருக்கும் என கூறியுள்ளது.