எடப்பாடி பழனிசாமி தலைமையிலான உலக முதலீட்டாளர்கள் மாநாடு பெரும் வெற்ரி பெற்றதாக அவரும் அவர் கட்சியினர்களும் தெரிவித்திருக்கிறார்கள். அவர்கள் நிர்ணயித்திருந்த இரண்டு லட்சம் கோடி ரூபாயை விட அதிகமான தொகையை இந்த மாநாடு மூலம் முதலீடுகளாக தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறதாம்.
எவ்வளவு முதலீடுகள்
கிட்ட தட்ட 146 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (Memorandums of Understanding (MoUs)) மூலம் 3.4 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறதாம். இதனால் தமிழகத்தில் சுமார் 10.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமாம்.
நாகப்பட்டினத்தில்
சிபிசிஎல் என்கிற நிறுவனம் 2004 சுனாமியால் பெரிதும் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் 7,400 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து ஒரு எண்ணெய் சுத்தீகரிப்பு ஆலையை நிறுவ இருக்கிறார்களாம். அதோடு ஹியூண்டான் நிறுவனம் மூலம் 7,000 கோடி ரூபாய்க்கு மின்சார கார்களை தயாரிக்கவும் ஆலைகள் நிறுவப்பட இருக்கிறதாம்.
முன்னனி நிறுவனங்கள்
இந்தியாவின் முன்னனி டயர் நிறுவனங்களில் ஒன்றான எம்.ஆர்.எஃப் தமிழகத்தில் மேலும் 2,100 கோடி ரூபாய் முதலீடு செய்து தன்னுடைய பெரம்பலூர் மற்றும் வேலூர் ஆலைகளை விரிவாக்கம் செய்ய இருக்கிறார்களாம். ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 2,500 கோடி முதலீடு செய்து ப்ரீமியம் பிராண்டு செல்போன்களை தயாரிக்க இருக்கிறார்களாம்.
எந்த நாடுகளில் இருந்து
தமிழக்ம் நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அமெரிக்கா, கொரியா, ஜப்பான், தைவான், ஜெர்மனி, பிரான்ஸ், சீனா என பல்வேறு உலகநாடுகளில் இருந்து முதலீடு குவிந்திருக்கிறதாம். அதோடு உள்நாட்டில் இருந்து ஒரு பெரிய கணிசமான தொகை முதலீடுகளாக கிடைத்திருக்கிறதாம்.
சிறு குறு தொழில் முனைவோர்கள்
வெறும் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மட்டும் தமிழகத்துக்கு முதலீடு கிடைக்கவில்லை. சிரு குறு தொழில்முனைவோர்களான MSME-க்களிடம் இர்நுதும் சுமார் 32,000 கோடிக்கு மேல் முதலீடு கிடைத்திருக்கிறதாம்.
துறைகள்
உணவுப் பதப்படுத்துதல், மின்சாரக் கார் தயாரிப்பு, துறைமுகம், வழக்கமான ஆட்டோமொபைல், உணவுத் தயாரிப்பு வளாகங்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தமிழகத்துக்கு முதலீடு கிடைத்திருக்கிறதாம்.
முன்னாள் முதல்வரால்
இன்ரு தமிழகம் இந்தியாவின் ஆட்டோ ஹப் என செல்லமாக அழைக்கப்படக் காரணம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். 1992-ல் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட தொழிற் கொள்கைகள் காரணமாகத் தான் இன்று தமிழகம் இந்தியாவுக்கே ஆட்டோ ஹப்பாக இருக்கிறது. அதே போல் இந்த மாநாடுகள் மூலம் தமிழகம் தன்னை மின்சார கார்களுக்கான உற்பத்தி ஹப்களாகவும் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் என்கிறார் எடப்பாடியார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications