நீரவ் மோடியின் பஞ்சாப் நேஷனல் பேங்க் ஊழல் வெளிச்சத்துக்கு வந்த பின் அடுத்து சிக்கிய நகை வியாபாரி மெகுல் சோக்சி. இவரும் பஞ்சாப் நேஷனல் பேங்கில் நடந்த ஒரு 12,700 கோடி ரூபாய் மோசடிக்கு உடந்தை என்பது தெரிய வந்தது. இவர் நீரவ் மோடிக்கு மாமா உறவ் முறை.
ஆண்டிகுவாவுக்கு தப்பி ஓட்டம்
அடித்துப் பிடித்து அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் உதவியுடன் ஆண்டிகுவா எனும் சிறிய நாட்டுக்கு பறந்து போய் விட்டார். அதன் பின் தற்போது மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வர நீதிமன்றங்களை நாடி பேசி வருவது போல, இப்போது இவரை ஆண்டிகுவாவில் இருந்து இந்தியா கொண்டு வரவும் ஆண்டிகுவா அரசுடன் இந்தியா பேசி வருகிறது.
முடியவே முடியாது
சில மாதங்களுக்கு முன்பு "மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர முடியாது அல்லது அவரால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது, காரணம் இந்திய அதிகாரிகள் மெகுல் சோக்சியின் பாஸ்போர்ட்டை முடக்கி வைத்திருப்பது தான்" என பஞ்சாப் நேஷனல் பேங்கின் அதிகாரிகள் வெளிப்படையாக சிபிஐ அதிகாரிகளிடம் சொன்னார்கள்.
ஆண்டிகுவா பிரஜை
தப்பித்த மெகுல் சோக்சி சில பெரிய இந்திய வழக்கறிஞர்களிடம் பேசி ஒரு வழியைக் கண்டு பிடித்தார். அதன் படி ஆண்டிகுவா அரசிடம் தன்னை ஆண்டிகுவா பிரஜையாக ஏற்றுக் கொள்ளும் படி மனு கொடுத்தார். இந்தியாவில் சில கறை படிந்த அதிகாரிகள் உதவி உடன் இந்தியாவில் இருந்து மெகுல் சோக்சியை ஆண்டிகுவா பிரஜையாக ஏற்றுக் கொள்ள ஆண்டிகுவா அரசுக்கு அனுமதியும் வாங்கிவிட்டார்.
ஆண்டிகுவா பிரதமர் அலுவலகம்
இந்தியாவில் இருந்து மெகுல் சோக்சியையோ இந்தியா அழைத்துச் செல்வது குறித்தோ அல்லது இந்திய அமலாக்கத்துறை அல்லது இந்திய சிபிஐ அமைப்புகளிடம் இருந்து இது குறித்து எந்த ஒரு விவரங்களை வரவில்லை எனத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள்.
ஒரு ஏர் இந்தியா விமானம்
ஆனால் போர்ட் ஆஃப் ஸ்பெயின் பகுதியில் ஒரு இந்திய விமான தரை இறங்கி இருப்பதை உறுதி செய்திருக்கிறது ஆண்டிகுவா அரசு. "அப்படி ஒருவேளை மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு செல்வார்கள் என்றால் கொண்டு செல்லட்டுமே, அவரால் இந்த நாட்டுக்கு எதையும் கொண்டு வரவில்லை, தேவையில்லாத விளம்பரங்களைத் தவிர" என்கிறா பிரதமர் அலுவலக முதமை அதிகாரியான ஹர்ஸ்ட்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications