ஒவ்வொரு வங்கிக்கும் ஆதார் இல்லாதவர்களுக்கு ஆதார் வழங்கும் வேலையைக் கொடுத்திருக்கிறது மத்திய அரசு. ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தன் ஆதார் வேலையைப் பார்க்க FIA Technology Services Pvt Ltd and Sanjivini Consultants Pvt Ltd என இரு நிறுவனங்களை பணியில் அமர்த்தியது. அந்த இரண்டு நிறுவனங்கள் 250-க்கும் மேற்பட்ட ஆபரேட்டர்களை பல்வேறு வங்கிகளில் அமர்த்தியது.
ஸ்டேஷன் ஐடி
ஒரு லேப் டாப் அல்லது ஒரு டெஸ்க் டாப் என எந்த ஒரு கருவி ஆதார் பதிவை மேற்கொள்கிறதோ அந்த கருவிக்கு தனியாக ஒரு ஸ்டேஷன் ஐடி கொடுக்கப்படும். ஆக ஒரு கருவியை பயன்படுத்துபவருக்கும் அதே ஸ்டேஷன் ஐடி தான் கிடைக்கும்.
மல்டிபிள் ஸ்டேஷன் ஐடி
ஒரே ஸ்டேஷன் ஐடியை வைத்து பல்வேறு கருவிகளில் பலரால் ஒரே நேரத்தில் ஆதார் பதிவை மேற் கொள்ள முடியும். அதற்கு ஒரு ஸ்ஏஷன் ஐடியை மல்டிபில் ஸ்டேஷன் ஐடியாக மாற்றினால் போதும். இப்படி ஸ்டேஷன் ஐடியை மல்டிபில் ஸ்டேஷன் ஐடியாக மாற்ற வங்கிகளுக்கும், UIDAI அமைப்புக்கு மட்டுமே அனுமதி உண்டு.
வங்கி விசாரணை
ஒவ்வொரு வங்கிக்கும் ஒரு ஸ்டேஷன் ஐடியை மல்டிபில் ஐடிகளாக மாற்ற முடியும். ஆனால் வங்கி விக்ரமின் ஸ்டேஷன் ஐடியை மல்டிபிள் ஸ்டேஷன் ஐடியாக மாற்றாத போது, விக்ரமால் எப்படி அதை பல்வேறு இடங்களில் பயன்படுத்தி இருக்க முடியும் என எஸ்பிஐ விக்ரமுக்கு சாதகமாகப் பேசி 33 லட்சம் அபராதப் பிரச்னையை முடித்தது. இப்படி 250 ஆபரேட்டர்களில் பாதிக்கு மேற்பட்ட ஆபரேட்டர்கள் தவறாக தங்கள் ஐடிகளை பயன்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
விக்ரமின் ஆதார் தகவல்கள் திருட்டு
விக்ரமின் ஆதார் விவரங்களில் கைரேகைகள் பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக வருமான வரித்துறை ஆவணங்களில், மகாராஷ்டிர அரசு ஆவணங்களில், மத்தியப் பிரதேச அரசு ஆவணங்களில், பல்வேறு வங்கிக் கணக்குகளில் பணத்தை வெளியே எடுப்பது என விக்ரமுக்குத் தெரியமலேயே பல்வேறு இடங்களில் விக்ரமின் கைரேகைகள் பயனப்டுத்தப்பட்டிருக்கிறதாம்.
விசாரணை நடக்கிறது
இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய UIDAI அதிகாரிகள் "விசாரனை நடந்து வருகிறது. ஆனால் ஆதார் தகவல்கள் எல்லாம் அத்தனை எளிதாக யாராலும் எடுக்க முடியாது. அத்தனை பாதுகாப்பாக இருக்கிறது. எஸ்பிஐ கூறிய புகாரை விசாரித்து வருகிறோம்" என முடித்துவிட்டார்கள்.