இப்போது நாம் வரி மாதங்களில் தான் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஜனவரி, பிப்ரவரி என எல்லாமே வரி மாதங்கள் தான். நம் சம்பளத்திலேயே பணத்தைப் பிடித்துவிடுகிறார்கள் என்பதால் நமக்கும் வருமான வரித்துறைக்கும் பெரிய தொடர்பு இல்லாமல் இருக்கிறது. ஆனால் வருமான வரி தனக்கு தோதான தொடர்புகளை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.இப்போது விளம்பரத்தின் மூலம் வந்திருக்கிறது.
“உங்கள் சொத்துக்களை ஒரு பினாமி பெயரில் வைத்திருந்தாலோ அல்லது உங்கள் பணத்தை பினாமியின் பெயரில் வைத்திருந்தாலோ அது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், பிடிபடும் சொத்தில் 25 சதவிகிதம் (அன்றைய சந்தை மதிப்புப் படி) அபராதமாகவும் செலுத்த வேண்டும். அப்படி பினாமி சொத்துக்கள் தடுப்புச் சட்டம் மூலம் இதுவரை ரூ.6900 கோடி மதிப்பிலான சொத்துகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என வருமான வரித் துறை விளம்பரம் வாயிலாக அறிவித்திருக்கிறது.
{photo-feature}


Click it and Unblock the Notifications