கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி உள்ளார்.
டெல்லி: கடந்த நான்கரை வருடத்தில் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது என்று நிதி அமைச்சர் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி உள்ளார்.
இன்று லோக்சபாவில் மத்திய பாஜக அரசு தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அதில் பேசிய பியூஷ் கோயல், பினாமி சட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை பெரிய பலனை அளித்து இருக்கிறது. இதனால் நிறைய பணக்காரர்களிடம் இருந்து கருப்பு பணம் மீட்கப்பட்டு இருக்கிறது.
பினாமி சட்டம், பணமதிப்பிழப்பால் ரூ.1.30 லட்சம் கோடி மதிப்புள்ள கருப்பு பணம் மீட்கப்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டது.
இந்த போலி நிறுவனங்கள் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்தியா 5 லட்சம் கோடி டாலர் மதிப்பு பொருளாதாரமாக முன்னேறும்.
சினிமா தயாரிப்புகளுக்கான ஜி.எஸ்.டி மிக குறைந்த அளவாக 12% நியமனம் செய்யப்பட்டுள்ளது. இந்த பல்வேறு திட்டங்களால் 2030க்குள் பல்வேறு இலக்குகளை இந்தியா அடையும், என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications