வங்கிகளில் கடன் மோசடி செய்திருக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி இருக்கிறார்.
டெல்லி: வங்கிகளில் கடன் மோசடி செய்திருக்கும் தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசி இருக்கிறார். இதையடுத்து அவர் பாஜகவினர் சாதனைகளை பட்டியலிட்டார்.
மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதில் மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் மத்திய அரசின் சாதனைகளை அடுக்கி பேசினார்.
கடந்த நான்கரை வருடங்களில் பாஜக கொண்டு வந்த திட்டங்களை அவர் பட்டியலிட்டார். மத்திய அரசின் கடைசி ஐந்து மாதங்களுக்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
ரியல் எஸ்டேட் துறை
பியூஷ் கோயல் தனது பேச்சில், அந்நிய நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ரியல் எஸ்டேட் தொழிலில் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதி செய்துள்ளோம். தவறு செய்த தொழில் அதிபர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் வாராக் கடன்களைக் குறைக்கும் வகையில் சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டன. வங்கிகளின் வாராக்கடன் ரூ 3 லட்சம் கோடி மீட்கப்பட்டு உள்ளது
தூய்மை இந்தியா திட்டம்
தூய்மை இந்தியா திட்டம் மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது .98% கிராமப்புற சுகாதாரம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 5.45 லட்சம் கிராமங்களில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய சுகாதாரத் திட்டத்தை பாஜக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. வரும் மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் அளிக்கப்படும். மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
கிராமப்புறங்களில் சாலை
கிராமப்புறங்களில் சாலைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதுவரை கிராம சாலைத் திட்டத்துக்கு ரூ.19 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பொருளாதாரத்தில் மோசமாக நலிவடைந்த மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 17லட்சத்து 4ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
மருத்துவமனை
நாட்டில் 22 ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்படவுள்ளது. 2014ல் 14-ஆக இருந்த எய்ம்ஸ் மருத்துவமனைகளின் எண்ணிக்கை தற்போது 21 ஆகியுள்ளது. ஏழைகளுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருட்கள் வழங்க ரூ.1.70 லட்சம் கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. சவுபாக்யா திட்டத்தின்கீழ் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications