மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கான முத்ரா திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.
டெல்லி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இடைக்கால பட்ஜெட்டில் பெண்கள் நலனுக்கான முத்ரா திட்டத்தில் நிறைய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு பாஜக ஆட்சியில் 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார்.
மத்திய பாஜக அரசு இன்று லோக்சபாவில் தனது கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இடைக்கால பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.

முத்ரா திட்டம் குறித்து இதில் மிக முக்கியமான அறிவிப்பை பியூஷ் கோயல் வெளியிட்டார். பெண்களுக்கு நலன் பயக்கும் அரசாக மத்திய பாஜக அரசு உள்ளது என்று அவர் கூறினார்.
அதில், முத்ரா திட்டத்தில் கடன் பெற்றவர்கள் 70 கோடி பேர். இதுவரை முத்ரா திட்டத்தில் 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ஏழை பெண்கள் பலன் அடைந்து இருக்கிறார்கள்.
இலவச எரிவாயு இணைப்பு திட்டத்தின் கீழ் இதுவரை 6 கோடி இணைப்புகள் தரப்பட்டுள்ளன. பெண்கள் நலனுக்காக கூடுதலாக 8 கோடி இலவச காஸ் இணைப்பு வழங்கப்படும்.
பணிபுரியும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பெண்கள் நல்ல வகையில் ஓய்வு எடுக்க முடியும். அதேபோல் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளும் இந்த காலத்தில் வழங்கப்படும், என்று நிதி அமைச்சர் தனது பட்ஜெட்டில் கூறியுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications