7.03 லட்சம் கோடி கடன் வாங்கி செலவு பண்றோங்க, பாத்துக்குங்க..? 2019 பட்ஜெட் எண்களில்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவழியாக பியூஷ் கோயலை வைத்து அங்கிட்டும் இல்லாமல் இங்கிட்டும் இல்லாமல் ஒரு இடைக்கால பட்ஜெட்டை மய்யமாக தாக்கல் செய்திருக்கிறது. அந்த பட்ஜெட்டில் முக்கியமானவைகள் மட்டும் கொஞ்சம் உங்களுக்காக. ரிகளில் இருந்து வரும் வருவாய் 17.05 லட்சம் கோடி ரூபாய். வரி அல்லாத தலைகளில் இருந்து வரும் வருவாய் 2.72 லட்சம் கோடி ரூபாய். கடன்களை வசூலித்ததன் மூலம் வரும் வருவாய் 12,508 கோடி ரூபாய். மற்ற தலைகளின் கீழ் வரும் வருவாய்90,000 கோடி ரூபாய்

 

வருவாய்கள் பட்டியல்

வருவாய்கள் பட்டியல்

வரிகளில் இருந்து வரும் வருவாய் 17.05 லட்சம் கோடி ரூபாய்
வரி அல்லாத தலைகளில் இருந்து வரும் வருவாய் 2.72 லட்சம் கோடி ரூபாய்
கடன்களை வசூலித்ததன் மூலம் வரும் வருவாய் 12,508 கோடி ரூபாய்
மற்ற தலைகளின் கீழ் வரும் வருவாய்90,000 கோடி ரூபாய்

கார்பரேட்டுகள் தான்

கார்பரேட்டுகள் தான்

இந்திய அரசுக்கு வரி மூலமாகத் தான் பெரிய வருவாய் வருவதாக பார்த்துவிட்டோம். ஆனால் யார் மூலம் அதிக வருவாய் வருகிறது என்பதையும் பார்த்துவிடுவோமே..
கார்ப்பரேட் நிறுவனங்கள் மூலம் 7.60 லட்சம் கோடி ரூபாய் வருகிறது. அதன் பின் வருமான வரி மூலம் 6.2 லட்சம் கோடி ரூபாய், சுங்க வரி மூலம் 1.45 லட்சம் கோடி ரூபாய்,மத்திய கலால் வரி மூலம் 2.59 லட்சம் கோடி ரூபாய், மோடி புகழ் ஜிஎஸ்டி மூலம் 7.61 லட்சம் கோடி ரூபா வரை வரி வசூலிக்கத் திட்டமிட்டிருக்கிறது மத்திய அரசு.

29 இந்திய மாநிலங்களுக்கு
 

29 இந்திய மாநிலங்களுக்கு

வழக்கமாக மத்திய அரசுக்கு வரும் வரி வருவாயில் ஒரு பங்கு மாநில அரசாங்கங்களுக்கும் போகும். கடந்த சில பட்ஜெட்டுகளாகத் தான் ஒரு பெரிய பங்கு மாநில அரசுகளுக்கு மாற்றப்படுகிறது. அதுவும் ஜிஎஸ்டி வந்ததால் தான். ஆக ஜிஎஸ்டி மாநிலங்களில் இருக்கும் வரை எந்த மாநிலமும் தானாக வரி வசூலிக்கக் கூடாது, முடியாது. ஆகையால் மத்திய அரசு மாநிலங்களுக்கு 8.44 லட்சம் கோடி ரூபாயை அறிவித்திருக்கிறது.

எல்லாம் லட்சம் கோடியில் தான்

எல்லாம் லட்சம் கோடியில் தான்

கடன் வாங்கி செலவு செய்ய இருக்கும் தொகை 7.03 லட்சம் கோடி ரூபாய். ஆக இந்த 2019 - 20 நிதி ஆண்டில் அரசுக்கு வரும் வருவாயை விட கூடுதலாக 7.03 லடச்ம் கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறது. இந்த 7.03 லட்சம் கோடியை பங்குச் சந்தைகளில் அரசு கடன் பத்திரங்கள் மற்றும் கருவூலப் பத்திரங்களாக 4.48 லட்சம் கோடியைத் திரட்ட இருக்கிறார்கள். சிறிய சேமிப்புத் திட்டங்கள் மூலம் 1.30 லட்சம் கோடி திரட்ட இருக்கிறார்கள். மாநில பிஎஃப் அமைப்புகள் மற்றும் அரசுக்குள்ளேயே கடன் வாங்குவதன் மூலம் 59,532 கோடி ரூபாயை திரட்ட இருக்கிறார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

central government is going to raise its debt to 7.03 lakh crore

central government planned to raise 7.03 lakh crore rupees from many heads as loan to run the government.
Story first published: Friday, February 1, 2019, 15:35 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X