சென்னை: பட்ஜெட்டில் ஏகப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டு நாட்டையே மிரள வைத்துள்ள பாஜகவை பாராட்டியும், காங்கிரசை தாக்கியும் எச்.ராஜா ட்வீட் ஒன்றினை பதிவிட்டுள்ளார்.
3 மாநிலங்களில் ஆட்சியை பாஜக இழந்திருக்கும் நிலையில் மத்திய பாஜக அரசு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த வகையில் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது.
யாரெல்லாம் இந்த நான்கரை வருஷம் அவதிப்பட்டார்களோ, யாரெல்லாம் மிகுந்த தொல்லைகளுக்கும், ஆளானார்களோ அவர்களை சாந்தப்படுத்தவே இந்த பட்ஜெட்டின் அறிவிப்புகள் உள்ளன.
பாஜக தலைவர்கள்
குறிப்பாக விவசாயிகள், நடுத்தர மக்களை குறி வைத்து ஒவ்வொரு அறிவிப்பும் இன்று வெளியானது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பாஜக தலைவர்கள் குஷியாகி வரவேற்று இருக்கிறார்கள்.
எச்.ராஜா
இதில் எச்.ராஜா ஒரு படி மேலே போய் நிற்கிறார். "கண்ணில் பயம் தெரியுதே" என்று ஒற்றைவரி ட்வீட் போட்டுள்ளார்.
யாரை சொல்கிறார்?
ஆனால், "கண்ணில் பயம் தெரியுதே" என்று எச்.ராஜா யாரை சொல்கிறார், யார் பயந்து கிடக்கிறார்கள் என்றுதான் புரியவில்லை. வெறும் சலுகைகளை இப்படி அறிவித்து விடுவதால் மட்டுமே காங்கிரஸ் தரப்பு பயந்து நடுங்கிவிடும் என்று எச்.ராஜா நம்புகிறாரா? அல்லது 3 மாநில தேர்தல் தோல்விகளை போல வரும் தேர்தலிலும் மண்ணை கவ்வக்கூடாது என்ற பயம் காரணமாகவே இத்தனை அறிவிப்புகளையும் பாஜக அறிவித்தது என்று எச்.ராஜா நம்புகிறாரா என்று தெரியவில்லை.
மூத்த தலைவர்
ஆனால், அறிவிப்புகளில் என்ன இருக்கிறது, யார் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் அறிவித்து விட்டு போகலாம் என்பதும், ஆனால் அவற்றினை செயல்படுத்தும்போதுதான் நடைமுறை சிக்கல்களும், அறிவிப்பின் சாத்தியங்களும் வெளிப்படும் என்பதும் மூத்த தலைவரான எச்.ராஜாவுக்கு தெரியாமல் இருக்குமா என்ன?!