இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இன்னும் ஒரு மணி நேரம் மட்டுமே இருக்கிறது. அதற்குள் மோடியின் கடைசி மற்றும் இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு அதிகம் உழைத்த அரசு அதிகாரிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்களேன்
நிதிச் செயலர்
இந்திய நிதி அமைச்சகத்திலேயே சீனியர் அதிகாரி. இவர் தான் செலவீனங்கள் துறைக்கு பொறுப்பு வகித்து வருகிறார். 36 வருடங்களுக்கு மேல் பல்வேறு பொறுப்புகளில்பணியாற்றி இருக்கிறார். குறிப்பாக தேர்தல் ஆணையத்தில் கூட பணியாற்ரிய அனுபவம் உள்ளவர்.
பொருளாதார விவகாரத் துறையில் செயலர்
பட்ஜெட்டை நிதி அமைச்சகம் தான் தயார் செய்யும் என பொதுவாகச் சொல்வார்கள். ஆனால் உண்மையில் நிதி அமைச்சகத்தின் கீழ் உள்ள பொருளாதார விவகாரத் துறை தான் பட்ஜெட்டைத் தயார் செய்யும். ரிசர் வங்கி, செபி மற்றும் உலக வங்கி போன்ற பல்வேறு அரசு மற்றும் துறைகளை ஒருங்கினைத்து பட்ஜெட்டைத் தயார் செய்யும் பெரும் பொறுப்பை தோலில் சுமந்தவர்.
வருவாய்த் துறை செயலர்
இந்தியா மட்டும் எல்லாம் தம்மா துண்டு நாடு தொடங்கி மிகப் பெரிய வல்லரசான அமெரிக்கா வரை வருவாய் இருந்தால் தான் பட்ஜெட்டே போட முடியும். அப்படி அரசு கடந்த 2018 - 19 நிதி ஆண்டுக்கு நிர்ணயித்த பட்ஜெட் வருவாய் இலக்குகளை சரியாக வசூலித்துக் கொண்டு வந்தவர்களில் முக்கியமானவர். கூடுதலாக இவர் தான் சரக்கு மற்றும் சேவை வரி நெட்வொர்க் அமைப்பின் (GST Network) மற்றும் ஆதார் அமைப்பில் சிஇஓ-ஆக் இருக்கிறார்.
நிதிச் சேவைகள் துறைச் செயலர்
1984 இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. இவர் தான் 21 பொதுத் துறை வங்கிகளுக்கு முடிசுடா தலைவர். ஒவ்வொரு வங்கியின் நிதி நிலை வலுவாக இருப்பதை உறுதி செய்து நாடு திவாலாகவில்லை என்பதை உறக்கச் சொல்ல வேண்டிய பெஇர்ய பொறுப்பில் இருப்பவர். இவர் பதவி ஏற்புக்குப் பின் ஆர்பிஐ உடன் சேர்ந்து வாராக் கடன்களை சிறப்பாக கையாள்வது குறிப்பிடத்தகக்து.
முதலீட்டுத் துறை செயலர்
கொஞ்சம் சிக்கலான துறை தான். அரசிடம் இருக்கும் முதலீடுகள் மற்றும் தேவை இல்லாத சொத்துக்களை நல்ல லாபத்துக்கு விற்று அரசுக்கு நிதி ஆதாரத்தைப் பெருக்க வேண்டும். இந்த துறையில் இருந்தும் மத்திய அரசுக்கு பெரிய அளவில் வருவாய் வந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த 2018 - 19 நிதியாண்டில் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லையாம்.
மத்திய நேரடி வரி வருவாய் பிரிவின் தலைவர்
இவர் தான் இந்தியாவில் வருமான வரியை முழுமையாக சட்டப்படி வசூலித்து அரசிடம் கொண்டு சேர்ப்பவர். தனி நபர் தொடங்கி மிகப் பெரிய கார்பரேட்டுகள் எல்லோரிடமிருந்து வரி வசூலிப்பது தான் இவரின் பிரதான கடமை. இந்திய பட்ஜெட்டின் வருவாயில் சுமார் 40 சதவிகிதத்துக்கு மேல் நேரடி வரி வருவாய் தான். அதைக் கொண்டு வந்து மத்திய அரசுக்கு சிறப்பாக வலு சேர்த்தவர்.