Budget 2019: முந்தைய இடைக்கால பட்ஜெட்களின் சிறப்பம்சங்கள் என்ன?..முக்கிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ

டெல்லி: மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டுகளில் ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புகளை பார்ப்போம்.

லோக் சபா தேர்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும். விவசாயிகள் முதல் சாதாரண குடிமகன் வரை மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டாக இது அமையவுள்ளது.

Budget 2019: முந்தைய இடைக்கால பட்ஜெட்களின் சிறப்பம்சங்கள் என்ன?..முக்கிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ

இதற்கு முன்னர் நிதியமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் அவரவர் சார்ந்த கட்சிகளின் சார்பில் அவரவர் ஆட்சி காலத்தில் இடைக்கால பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தனர். அந்த வகையில் முந்தைய இடைக்கால பட்ஜெட்டுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.

  1. இடைக்கால பட்ஜெட்டின் போது வரிகளில் கணிசமான மாற்றங்களை கொண்டு வந்த முதல் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
  2. தற்போதைய பொருளாதார நிலையில் முறையான பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை காத்திருக்க கால அவகாசம் இல்லாததால் இந்த பட்ஜெட்டிலேயே அனைத்தையும் அறிவிக்க வேண்டி உள்ளது என்று ப.சிதம்பரம் கடந்த 2014-ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
  3. கடந்த 2014- 15-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது மறைமுக வரிச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் சிதம்பரம். இதன் மூலம் செல்போன்கள், தொழிற்சாலைக்கான எண்ணெய்கள், ஆட்டோமொபைல் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தது.
  4. அரிசியை சேமிப்பது, பேக்கிங் செய்வது, லோடிங், அன்லோடிங் ஆகியவற்றுக்கு சேவை வரியை விலக்க உத்தேசித்தார்.
  5. பாதுகாப்பு படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
  6. நிதி தாக்கங்கள் மீது ப.சிதம்பரம் மட்டும் முக்கிய மாற்றங்களை கொண்டு வரவில்லை. மற்றவர்களும் கொண்டு வந்தனர்.
  7. கடந்த 2009-10-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, 2 சதவீத ஏற்றுமதி கடன்களுக்கான கால அவகாசத்தை 6 மாதங்கள் நீட்டித்தார்.
  8. பொதுத் துறை மற்றும் தனியார் துறை திட்டங்களுக்கு 60 சதவீதம் வரை மறு கடன் அளிக்கும் திட்டத்தை உத்தேசித்தார்.
  9. கடந்த 2004-05-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஜஸ்வந்த் சிங், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க திட்டமிட்டார்.
  10. விவசாய வருமான காப்பீட்டு திட்டத்தை 20 மாவட்டங்களில் இருந்து 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கவும் ஜஸ்வந்த் உத்தேசித்திருந்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+