Budget 2019: முந்தைய இடைக்கால பட்ஜெட்களின் சிறப்பம்சங்கள் என்ன?..முக்கிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ
டெல்லி: மத்திய இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார். இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டுகளில் ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புகளை பார்ப்போம்.
லோக் சபா தேர்தலுக்கு முன்பு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தாக்கல் செய்யும். விவசாயிகள் முதல் சாதாரண குடிமகன் வரை மிகவும் எதிர்பார்க்கப்படும் பட்ஜெட்டாக இது அமையவுள்ளது.

இதற்கு முன்னர் நிதியமைச்சர்களாக இருந்த ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி மற்றும் ஜஸ்வந்த் சிங் உள்ளிட்டோர் அவரவர் சார்ந்த கட்சிகளின் சார்பில் அவரவர் ஆட்சி காலத்தில் இடைக்கால பட்ஜெட்டுகளை தாக்கல் செய்தனர். அந்த வகையில் முந்தைய இடைக்கால பட்ஜெட்டுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை பார்ப்போம்.
- இடைக்கால பட்ஜெட்டின் போது வரிகளில் கணிசமான மாற்றங்களை கொண்டு வந்த முதல் நிதியமைச்சர் ப. சிதம்பரம்.
- தற்போதைய பொருளாதார நிலையில் முறையான பட்ஜெட் தாக்கல் செய்யும் வரை காத்திருக்க கால அவகாசம் இல்லாததால் இந்த பட்ஜெட்டிலேயே அனைத்தையும் அறிவிக்க வேண்டி உள்ளது என்று ப.சிதம்பரம் கடந்த 2014-ஆம் ஆண்டு கூறியிருந்தார்.
- கடந்த 2014- 15-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது மறைமுக வரிச் சட்டத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர் சிதம்பரம். இதன் மூலம் செல்போன்கள், தொழிற்சாலைக்கான எண்ணெய்கள், ஆட்டோமொபைல் பொருட்கள் மீதான கலால் வரியை குறைத்தது.
- அரிசியை சேமிப்பது, பேக்கிங் செய்வது, லோடிங், அன்லோடிங் ஆகியவற்றுக்கு சேவை வரியை விலக்க உத்தேசித்தார்.
- பாதுகாப்பு படையினருக்கு ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தின் கோட்பாட்டை ஏற்றுக் கொண்ட சிதம்பரம், அடுத்த நிதியாண்டு முதல் அமல்படுத்தப்படும் என கூறியிருந்தார்.
- நிதி தாக்கங்கள் மீது ப.சிதம்பரம் மட்டும் முக்கிய மாற்றங்களை கொண்டு வரவில்லை. மற்றவர்களும் கொண்டு வந்தனர்.
- கடந்த 2009-10-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி, 2 சதவீத ஏற்றுமதி கடன்களுக்கான கால அவகாசத்தை 6 மாதங்கள் நீட்டித்தார்.
- பொதுத் துறை மற்றும் தனியார் துறை திட்டங்களுக்கு 60 சதவீதம் வரை மறு கடன் அளிக்கும் திட்டத்தை உத்தேசித்தார்.
- கடந்த 2004-05-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த ஜஸ்வந்த் சிங், மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியில் 50 சதவீதத்தை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க திட்டமிட்டார்.
- விவசாய வருமான காப்பீட்டு திட்டத்தை 20 மாவட்டங்களில் இருந்து 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கவும் ஜஸ்வந்த் உத்தேசித்திருந்தார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications