டெல்லி: பட்ஜெட்டில் பொய் வாக்குறுதிகள் நிச்சயம் வெளிவரும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கிறது. அதாவது தற்போதைய மத்திய ஆட்சியின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதில் நடுத்தர மற்றும் ஏழை மக்களை கவரும் திட்டங்கள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் இடைக்கால பட்ஜெட் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில் லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு பிரபலமான மற்றும் ஜனரஞ்சகமான திட்டங்களை கொண்டு வர முயற்சிப்பார்கள்.
இதுவரை பாஜக ஆட்சி தாக்கல் செய்த பட்ஜெட்களில் எந்த வித பொதுப் பயனும் இல்லை. இன்றைய பட்ஜெட்டில் பொய்கள் வெளிவரும். அடுத்த 4 மாதங்களில் திட்டங்களை எப்படி செயல்படுத்துவார்கள்? என்று கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.